கடல் உயிரின பருவநிலை மாற்றம் குறித்த ஆய்வு

1 mins read
82d9c9b9-8568-44a7-8fb6-087722dcbfd5
-

பரு­வ­நிலை மாற்­றம் சிங்­கப்­பூ­ரின் கடற்­ப­கு­தி­யில் உள்ள கடல் சூழலை எவ்­வாறு பாதிக்­கிறது என்­ப­தைக் கண்­ட­றிய அர­சாங்­கம் ஆய்­வு­களை நடத்­த­வுள்­ளது.

புதிய கடல்வாழ் பரு­வ­நிலை மாற்ற அறி­வி­யல் திட்­டத்­தின் கீழ் வரும் நவம்­பர் மாதத்­தில் புதிய ஆய்­வுத் திட்­டங்­க­ளுக்­காக அது அழைப்பு விடுக்­கும்

தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ, நேற்று நடந்த கடல்வாழ் அறி­வி­யல் கருத்­த­ரங்­கில் இதைத் தெரி­வித்­தார்.

"கடல் மட்ட உயர்வு, கடற்­ப­ரப்பு தட்­ப­வெப்ப நிலை­யின் அதி­க­ரிப்பு, மோச­மான புயல்­கள் போன்­ற­வற்­றால் நமது கடல் சுற்­றுச்­சூ­ழல் எவ்­வாறு பாதிக்­கப்­படும் என்­ப­தை­யும் அவற்றைத் தாக்­குப்­பி­டிக்­கக் கூடிய வகை­யில் சமா­ளிக்­கும் வழி­கள் பற்­றி­யும் நாம் ஆரா­ய­வுள்­ளோம். கடல் மட்ட உயர்­வி­லி­ருந்து நமது கடற்­க­ரை­க­ளைத் தடுக்க இயற்கை சார்ந்த தீர்­வு­க­ளைப் பயன்­ப­டுத்­து­வது அதில் அடங்­கும்," என்று அமைச்­சர் கூறினார்.

$25 மில்லியன் மதிப்புள்ள கடல் ­வாழ் பரு­வ­நிலை மாற்ற அறி­வி­யல் திட்­டத்­துக்கு தேசிய பூங்கா கழகம் தலைமை தாங்குகிறது. மேலும் பல அரசாங்க அமைப்புகளும் ஆய்வு அமைப்புகளும் அதில் பங்கேற்கின்றன.