குடும்பங்களைப் பிரிந்துள்ள மலேசியர்களுக்கு ஆறுதல்

குடும்பங்களைப் பிரிந்துள்ள மலேசியர்களுக்கு ஆறுதல்

2 mins read
0500feb1-0a46-4b0b-a331-3a0115470826
-

இந்து இளங்­கோ­வன்

35 வயது பொறி­யா­ளர் பார்த்­தி­பன் முனு­சாமி கடந்த 10 ஆண்­டு­ க­ளாக சிங்­கப்­பூ­ரில் பணி­பு­ரிந்து வரும் மலே­சி­யர். எல்லை மூடப்­படும் முன்பு தவ­றா­மல் ஒவ்­வொ­ரும் வார இறு­தி­யி­லும் ஜோகூர் பாரு­வில் வசிக்­கும் தமது பெற்­றோ­ரைப் பார்க்­கச் சென்­று­வி­டு­வார்.

கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக குடும்­பத்­தைப் பிரிந்­தி­ருப்­பது மிகுந்த கவ­லையைத் தரு­வ­தாக திரு பார்த்­தி­பன் கூறி­னார்.

அதிலும் தமது அக்­காள் மக­ளின் திரு­ம­ணத்­திற்கு செல்­ல­ முடி­யா­தது பெரிய ஏமாற்­றம் தந்­த­தாக அவர் சொன்னார்.

கிரு­மித்­தொற்று கார­ண­மாக சென்ற ஆண்டு சிங்­கப்­பூ­ர் மலேசி­ய எல்­லை­கள் மூடப்­பட்­டன. இத­னால் பார்த்­தி­பனை போன்ற சிங்­கப்­பூ­ரில் வசிக்­கும் பல நூறா­யி­ரம் மலே­சி யர்­கள் தாய்­நாடு திரும்ப முடி­யா­து உள்­ள­னர்.

இவர்களின் வாட்­டத்தைப் போக்கி மகிழ்ச்­சியை உண்­டாக்­கும் வகையில் 'காஸ்வே எக்ஸ்­சேஞ்ச்' விழா பிர­பல நகைச்­சுவை நடி­கர்­களை கொண்ட இல­வச நிகழ்ச்­சியை படைக்­க­வுள்­ளது.

நாளை 18ஆம் தேதி இணை­யம் வழி நடக்­க­வி­ருக்­கும் 'லெட்ஸ் லாஃப் மலே­சியா' என்ற இந்­நி­கழ்ச்­சி­யில் பிர­பல மலே­சிய நகைச்­சுவை கலை­ஞர்­கள் கஜன், பிர­காஷ் டேனி­யல் உள்ளிட்டவர்கள் பங்­கேற்­க­உள்­ள­னர்.

'காஸ்வே எக்ஸ்­சேஞ்ச்' சிங்­கப்­பூர், மலே­சியா இடையே கலை, கலா­சா­ரப் பரி­மாற்­றத்­திற்­கான வரு­டாந்­திர விழாவை நடத்த கடந்த 2010ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

"கவ­லை­களை மறக்க சிரிப்­பு­தான் சிறந்த வழி என்று நான் உறு­தி­யாக நம்­பு­கி­றேன். நானும் குடும்­பத்தை பிரிந்து சிங்­கப்­பூ­ரில் வசிக்­கும் ஒரு மலே­சி­யர்­தான். உறவு­களை விட்டு சிங்­கப்­பூர் வந்து உழைக்­கும் மலே­சி­யர்­களை ஒன்­றி­ணைத்­துக் கொண்­டாட ஒரு தள­மாக இந்­நி­கழ்ச்சி அமை­யும்." என்­றார் 'லெட்ஸ் லாஃப் மலே­சியா' நிகழ்ச்­சி­யின் இயக்­கு­னர் திரு ஷான் லூர்­து­சாமி.

நாளை இரவு 8 மணிக்கு நடை­பெ­றும் இந்­நி­கழ்ச்­சி­யைக் காண இங்கு பதிவு செய்­ய­லாம்: https://llm2021.peatix.com