புதிய வேளாண் பள்ளி திறப்பு

புதிய வேளாண் பள்ளி திறப்பு

2 mins read
ca36cfc8-fae9-49ab-a60b-e4990197e09b
புதிய வேளாண் பள்ளியில் பயிலும் மாணவர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஜூ கூன் எம்ஆர்டி ரயில் நிலையத்­திற்கு அருகே 60 பெனோய் சாலை­யில் அமைந்­துள்ளது புதிய வேளாண் தொழில்­நுட்­பப் பயிற்­சிப் பள்ளி.

வேளாண் தொழில்நுட்பத் துறை­யில் ஆற்­றல் உள்­ள­வர்­களை ஊக்கு­வித்து அவர்­க­ளின் திறன்­களை மேம்­ப­டுத்த தேசி­யத் தொழிற்­சங்கக் காங்­கி­ர­ஸின் 'லெர்­னிங்­ஹப்' தொடர்­கல்வி, பயிற்­சிப் பிரி­வின் தேசிய அள­வி­லான முயற்­சி­யில் இப்­பள்ளி அடங்­கும்.

2030ஆம் ஆண்­டுக்­குள் தனக்­குத் தேவை­யான ஊட்­டச்­சத்­தில் 30 விழுக்­காட்டை உள்­ளூ­ரி­லேயே தயா­ரிக்­கும் சிங்­கப்­பூ­ரின் இலக்கை எட்­டு­வது இந்த முயற்­சி­யின் நோக்­கம்.

சிங்­கப்­பூ­ரின் வேளாண் சார்ந்த இலக்­கு­களை அடை­வ­தில் பயிற்சி வழங்­கு­வது ஒரு முக்­கிய அம்­சம் என்று 'லெர்­னிங்­ஹப்' தலை­வர் யூஜீன் வோங் கூறி­னார்.

சிங்­கப்­பூர் சொந்­த­மாக உணவைத் தயா­ரிப்­பது முக்­கி­யம் என்று ஆய்வு ஒன்­றில் பங்­கேற்­றோரில் 97 விழுக்­காட்­டி­னர் கரு­து­கின்­ற­னர். சுமார் 300 பேர் ஆய்­வில் பங்­கேற்­ற­னர்.

அவர்களில் சிலர் இந்­தத் துறை­யில் இல்­லா­த­வர்­கள். அவர்­களில் 90 விழுக்­காட்­டி­னர், தொழில் வளர்ச்­சிக்­கும் மேம்­பாட்­டிற்­கும் வேளாண் தொழில்­நுட்­பத் துறை­யில் வாய்ப்­பு­கள் அதி­கம் எனக் கூறி­னர்.

புதிய பள்­ளி­யில் பாடத் திட்­டம் ஆறு மாதங்­க­ளுக்கு நீடிக்­கும். பயிர்­களை வளர்ப்­ப­தில் அடிப்­ப­டைத் திறன்­கள், வேளாண் தொழில்­நுட்பம், வேளாண் செயல்­மு­றை­கள், தானி­யக்­க­மும் வர்த்­த­க­மும் என்று நான்கு அங்­கங்­க­ளாக பாடத் திட்டம் பிரிக்­கப்­படும்.

வேளாண் செயல்­மு­றை­களில் செயற்கை நுண்­ண­றிவு அம்­சங்­களைச் சேர்க்­கும் உத்­தி­களும் மாண­வர்­க­ளுக்­குக் கற்­றுத் தரப்­படும். முன்பு சிங்­கப்­பூ­ரில் போது­மான நிலம் இல்லை, அத்­து­டன் நாடு எல்லா பொருட்­க­ளை­யும் இறக்­கு­மதி செய்து வந்­தது, அத­னால் வேளாண் துறைக்­குள் நுழை­வது சிர­ம­மாக இருந்­தது என்­றார் பள்­ளி­யின் மாண­வர்­களில் ஒரு­வரான திரு ஷாஜி­ஹான்.

"இப்­போது இந்­தத் துறைக்கு அதிக ஆத­ரவு இருப்­ப­தோடு வேளாண் துறைக்­கென இட­மும் இருக்­கிறது, வர்த்­தக வாய்ப்­பு­கள் அதி­கம் உள்­ளன. இது வெற்­றி­­அடை­யும் என்று நான் நம்­பு­கி­றேன்," எனத் திரு ஷாஜி­ஹான் சொன்­னார்.

தொடக்க நிகழ்ச்­சி­யில் தேசி­யத் தொழிற்­சங்­கக் காங்­கி­ர­ஸின் தலை­மைச் செய­லா­ளர் இங் சீ மெங் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்­டார். தேசிய அள­வில் உள்ள தேவை­யைப் பூர்த்­தி­செய்­ய­வும் தொழி­லதிபர்­க­ளுக்­குப் புதிய வாய்ப்­பு­களை வழங்­க­வும் வளர்ந்து­வரும் இந்­தத் துறை கைகொ­டுக்­கும் என்று நம்­பு­வ­தா­கத் திரு இங் கூறி­னார்.