துவாஸ் வெடிப்பு: பொது விசாரணை

துவாஸ் வெடிப்பு: பொது விசாரணை

2 mins read
c05d0760-295e-4282-967d-59f7db27c7f4
துவாஸில் வெடிப்பு நேர்ந்த பிறகு புகைமூட்டமாக இருந்த பகுதி. படம்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை/ஃபேஸ்புக் -

மூவ­ரைப் பலி­வாங்­கிய துவா­ஸில் உள்ள தொழில்துறைக் கட்டடத்தில் நேர்ந்த வெடிப்பு குறித்து வரும் திங்­கட்­கி­ழமை முதல் பொது விசா­ரணை நடத்­தப்­ப­ட­வுள்­ளது. கடந்த பிப்­ர­வரி மாதம் நிகழ்ந்த வெடிப்­புக்­குப் பின்­னால் இருக்­கக்­கூ­டிய கார­ணங்­கள், சூழ்­நி­லை­கள் ஆகி­யவை முதற்­கட்ட விசா­ரணையில் ஆராயப்படும் என்று மனி­த­வள அமைச்சு வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டது. முதற்­கட்ட விசா­ரணை அடுத்த மாதம் எட்­டாம் தேதி வரை நடை­பெ­றும்.

விபத்து குறித்து தான் விசா­ரணை மேற்கொண்டதாகவும் அதில் கண்­டு­பி­டித்த தக­வல்­க­ளைத் தெரிவிக்­கப்­போ­வ­தா­க­வும் மனி­த­வள அமைச்சு கூறி­யது. சம்­பவ இடத்­திற்கு நேரில் சென்­றது, ஆதா­ரம் திரட்­டி­யது, முக்­கிய சாட்­சி­களை அடை­யா­ளம் கண்டு அவர்­களை பேட்டி கண்­டது, தட­ய­வி­யல் சோதனை­களை நடத்­தச் சொன்­னது உள்­ளிட்ட நட­வ­டிக்­கை­கள் தான் மேற்­கொண்ட விசா­ர­ணை­யில் இடம்­பெற்­ற­தாக அமைச்சு குறிப்­பிட்­டது. சம்­ப­வத்­தைப் பார்த்­த­வர்­கள், நிபு­ணர்­கள் ஆகி­யோர் சாட்­சி­ய­ளிப்­பர் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. பொது­மக்­களும் நீதி­மன்ற விசா­ர­ணைக்கு நேர­டி­யா­கச் செல்­ல­லாம். அரசு நீதி­மன்­றங்­களின் 8ஏ நீதி­மன்­றத்­தில் விசா­ரணை காலை 10 மணி முதல் மாலை ஐந்து மணி வரை நடை­பெ­றும். இம்­மா­தம் 20ஆம் தேதி­யி­லி­ருந்து 24ஆம் தேதி வரை­யி­லும், 27ஆம் தேதி­யி­லி­ருந்து அடுத்த மாதம் ஒன்­றாம் தேதி வரை­யி­லும், அடுத்த மாதம் நான்­காம் தேதி­யி­லி­ருந்து எட்­டாம் தேதி வரை­யி­லும் நீதி­மன்ற விசா­ரணை நடை­பெ­றும்.

எனி­னும், கிரு­மிப் பர­வல் சூழல் கார­ண­மாக பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் நடப்­பில் இருப்­ப­தால் நீதி­மன்­றத்­தில் குறிப்­பிட்ட எண்­ணிக்­கைக்கு மேல் மக்­கள் இருக்­கக்­கூ­டாது. கடந்த பிப்­ர­வரி மாதம் 24ஆம் தேதி­யன்று நிகழ்ந்த வெடிப்­பில் 10 ஊழி­யர்­கள் காய­முற்­ற­னர். காய­முற்ற மூவர் பின்­னர் மர­ண­மடைந்­த­னர். காய­முற்­றோ­ரில் கடைசி­யாக குண­ம­டைந்­த­வர் கடந்த ஜூன் மாதத்­தில் மருத்­து­வ­ம­னை­யி­லி­ருந்து இருப்டம் திரும்பினர்.

இரண்டாம் கட்ட நீதிமன்ற விசாரணை வரும் நவம்பர் மாதம் 15ஆம் தேதியிலிருந்து 19ஆம் தேதி வரை நடைபெறும் என்று மனிதவள அமைச்சு கூறியது.