$14 மில்லியன் ரொக்கப் பணத்தைக் கையாட கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ளதாக இரு வெவ்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த இரண்டு இயக்குநர்கள் நேற்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
சிங்கப்பூரர்களான 54 வயது லீ பூன் டெக், 56 வயது சான் இயூ டெயிக் மீதுக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சான் மீது இரண்டு நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டுகளும்; லீ மீது மூன்று நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகள் உட்பட 12 குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இவற்றுள் இரண்டு சானுடன் இணைந்து அவர் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றங்கள்.
லீ சுயமாக $2.2 மில்லியன் கையாண்டதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. மேலும், லீ $16.2 மில்லியனை வேறு 'ஸ்ட்ரெய்ட்ஸ்வோர்ல்ட் அட்வைசரி' மூலம் கையைண்டதாகக் கூறப்படுகிறது.
'ஸ்ட்ரெய்ட்ஸ்வோர்ல்ட் அட்வைசரி' பிரிட்டிஷ் வெர்ஜின் ஐலெண்ட்ஸ்'இல் உள்ள நிறுவனம் என்றும் சான்தான் அதன் இயக்குநர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது சான் ஃபோர் செந்தோசா இன்டர்நேஷனல், ஹேப்பிலேண்ட் வோர்ல்ட், சொவ்ரன் ஒயிட் (சிங்கப்பூர்) இன்டர்நேஷனல் லாஜிஸ்ட்டிக்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்களின் இயக்குநராக இருக்கிறார்.
இவை நீதிமன்ற ஆவணங்களில் இடம்வில்லை.
லீ தற்போது 'ஹெச்பி குளோபல்' நிறுவனத்தின் இயக்குநராக பணிபுரிகிறார். அவர் மீது மேலும் ஒன்பது குற்றச்சாட்டுகள் உள்ளன. இவற்றுள் போலிக் கணக்குகளைத் தயாரித்ததும் போலி ஆவணங்களைப் பயன்படுத்தியதும் அடங்கும்.
ஜூன் 2014ல் பணத்தைக் கையாட கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக மீண்டும் சான் மீதும் லீ மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதில், $7 மில்லியனை 'கேஎல்டபிள்யு' ஹோல்டிங்ஸ்'சின் வங்கி கணக்கிலிருந்து 'ஸ்ட்ரெய்ட்ஸ்வோர்ல்ட் அட்வைசரி'க்குக் கட்டணமாக செலுத்தியதாக கூறப்படுகிறது.

