2ஆம் கட்ட வாடகை நிவாரண நிதி வழங்கல்

2ஆம் கட்ட வாடகை நிவாரண நிதி வழங்கல்

1 mins read
9f6356f1-0ca0-4320-b623-a2f1cf25c87b
-

கொரோனா கிருமிப் பரவல் சூழலால் ஏற்பட்ட நெருக்கடிகளைச் சமாளிக்க 35,800க்கும் மேற்­பட்ட வர்த்தக இடங்களின் வாட­கை­தா­ரர்­களும் உரி­மை­யா­ளர்­களும் இரண்­டாம் கட்ட வாடகை நிவாரண நிதியை (ஆர்­எஸ்­எஸ்) இம்­மா­தம் 22ஆம் தேதி முதல் பெறு­வர்.

திட்­ட­மிட்­ட கால­கட்­டத்­திற்கு ஒரு மாதம் முன்­ன­தா­கவே $200 மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட நிதி வழங்­கப்­படுவதாக சிங்­கப்­பூர் உள்­நாட்டு வரு­வாய் ஆணை­ய­மும் நிதி அமைச்­சும் நேற்று வெளியிட்ட கூட்டு அறிக்­கை­யில் தெரி­வித்தன. நிறு­வ­னங்­க­ளுக்கு விரை­வில் நிதி உதவி கிடைப்­பதை இது உறு­திப்­படுத்­தும் என அது கூறியது.

முதல் கட்ட நிவாரண நிதியைப் போலவே இம்­மு­றை­யும் கடைக்­காரர்­க­ளுக்கு நேர­டி­யாக நிதி வழங்­கப்­படும் என்று அறிக்கை தெரி­வித்­தது.

இது கடைக்­கா­ரர்­களை நிதி விரைவில் சென்­ற­டை­வதை உறு­தி­ப்ப­டுத்­து­கிறது என்­றும் அது தெரி­வித்­தது.

இந்த வாட­கை நிவாரணம் சிறிய, நடுத்­த­ர வர்த்தக­ங்களுக்­கும் தகுதி பெறும் இலாப நோக்­க­மற்ற அமைப்­பு­க­ளுக்­கும் வழங்­கப்­படும். வாட­கை நிவாரண நிதி பற்­றிய தக­வல்­களை தகுதி பெறு­வோர் அஞ்­சல் முலம் பெறுவர். 'மைடெக்ஸ்' இணைய வாசல் வழி செப்­டம்­பர் 22ஆம் தேதியிலிருந்து அக்­க­டிதத்­தின் மின் நகலைப் பெற்­றுக்­கொள்­ள­லாம்.

'பேநவ்' அல்­லது 'ஜைரோ' ஏற்­பா­டு­கள் இல்­லா­த­வர்­களுக்கு அக்­டோ­பர் 6ஆம் தேதிக்­குள் காசோ­லை­கள் சென்ற­டை­யும்.

வாட­கை நிவாரணத்துக்குத் தகுதி பெற்­றும், நிதி குறித்த அறி­விப்­பைப் பெறா­தோர் சிங்­கப்­பூர் உள்­நாட்டு வரு­வாய் ஆணை­யத்­துக்கு விண்­ணப்­பம் அனுப்ப வேண்­டும். விண்­ணப்­பங்­களை இம்­மா­தம் 29ஆம் தேதி­யி­லி­ருந்து அனுப்­ப­லாம். விண்­ணப்­பங்­கள் ஆணை­யத்­தைச் சென்­ற­டைய வேண்­டிய இறு­தி­நாள் நவம்­பர் 12ஆம் தேதி.