ஏமி கோர்: பொதுச் சுகாதார மேம்பாட்டில் மக்கள் பங்கு

ஏமி கோர்: பொதுச் சுகாதார மேம்பாட்டில் மக்கள் பங்கு

2 mins read
01b51f7d-b18e-4e41-bfdc-67f026628d41
நேற்­றைய கலந்­து­ரை­யா­ட­லில் பங்கேற்றவர்கள் தூய்மைச் சிந்தனையை பொது மக்களிடம் ஏற்படுத்துவது குறித்து கருத்துப் பரிமாறிக் கொண்டனர்படம்: ஷின் மின் டெய்லி நியூஸ் -

மற்­ற­வர்­க­ளைப் பணி­வன்­பு­டன் குப்­பையை எடுக்­கச் சொல்­வது, பிள்ளை­கள் தூய்­மை­யான பழக்­க­வழக்­கங்­க­ளைக் கடைப்­பி­டிக்க வைப்­பது, இவற்­றின் மூலம் பொதுச் சுகா­தா­ரத்தை மேம்­ப­டுத்­த­லாம்.

உலக தூய்மை தினத்தை முன்னிட்டு சிங்­கப்­பூர் பொதுச் சுகா­தார மன்­றம் நேர­லை­யாக நேற்று ஏற்­பாடு செய்­தி­ருந்த தூய்மை தொடர்­பான கலந்­து­ரை­யா­ட­லில் நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற மூத்த துணை அமைச்­சர் ஏமி கோர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

"பொதுச் சுகா­தா­ரம், தூய்மை பற்றிய விழிப்­பு­ணர்­வும் எதிர்­பார்ப்­பு­களும் அதி­க­ரிக்­கும்­போது தர­மான துப்­பு­ர­வுப் பணி சேவைக்­கான தேவை­யும் அதி­க­ரிக்­கும்.

"இதைச் சமா­ளிக்க துப்­பு­ரவு, கழிவு நிர்­வா­கம், பூச்­சிக்­கொல்லி சேவை வழங்­கு­நர்­கள் ஆகி­யோர் புதுப்­புது ஆற்­றல்­களை வளர்த்­துக் கொள்ள வேண்­டி­யி­ருக்­கும்.

"இது தொடர்­பான ஊழி­ய­ரணி மூப்­ப­டைந்து, குறைந்து வரும் நிலை­யில், உற்­பத்­தித்­தி­ற­னைப் பெருக்கி இது­போன்ற வேலை­களை மக்­கள் விரும்பி ஏற்­கும் வகை­யில் அவற்றை மாற்­றி­ய­மைக்க வேண்­டும்," என அமைச்­சர் விளக்­கி­னார்.

சிங்­கப்­பூரை தூய்­மை­யாக வைத்­திருப்­போம் என்ற ஆண்­டு­தோ­றும் நடை­பெ­றும் இயக்­கத்­தின் ஒரு பகு­தி­யாக பொதுச் சுகா­தார மன்றத்­தின் நேற்­றைய கலந்­து­ரை­யா­டல் இடம்­பெற்­றது.

ஏப்­ரல் மாதம் தொடங்­கிய இந்த ஆறு­மாத இயக்­கத்­தில் பல நடவடிக்கை­களும் திட்­டங்­களும் இடம்­பெற்­றுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

நேற்­றைய கலந்­து­ரை­யா­ட­லில் துப்­பு­ர­வுத் தொழி­லைச் சேர்ந்­த­வர்­களும் சுற்­றுப்­பு­றத்­தைப் பேணும் அமைப்­பு­க­ளைச் சேர்ந்­த­வர்­களும் பங்­கேற்­ற­னர்.

இவர்­கள் தூய்மை சிந்­தனையை பொது­மக்­க­ளி­டம், குறிப்­பாக பொது­மக்­கள் கூடும் பூங்­காக்­கள், கடற்­கரை­கள், அக்­கம்­பக்­கப் பகு­தி­கள், உணவு அங்­காடி நிலை­யங்­கள்,காப்­பிக் கடை­கள் போன்ற இடங்­களில் எவ்­வாறு ஏற்­ப­டுத்­து­வது என்­பது குறித்து கருத்து பரி­மா­றிக்­கொண்டனர்.

இதில், விதி­மு­றை­கள் மூலம் பொதுச் சுகா­தா­ரத்­தின் தரத்தை மேம்­ப­டுத்­து­வ­தில் உள்ள சாதக, பாத­கங்­களை ஆராய்ந்­த­னர்.

இது­பற்­றிக் கூறிய சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழக சமூ­க­வி­யல் துறை­யின் இணைப் பேரா­சிரியர் டாக்­டர் டான் எர்ன் செர், "இதில் முடி­வாக என்ன வேவை என்­ன­வென்­றால் எவ­ரும் கவ­னிக்­காத போதும் குப்பை எறி­யா­மல் இருப்­ப­வர்­களை உரு­வாக்­கு­வ­து­தான்," என்று தெரி­வித்­தார்.

முன்­ன­தாக, ஏற்­கெ­னவே பதிவு செய்­யப்­பட்ட உரை ஒன்­றில், கொவிட்-19 கொள்­ளை­நோய் பொதுச் சுகா­தா­ரத்­தி­லும் சுத்­தத்திலும் உயர் தர­நி­லை­கள் இருக்­கவும் அதற்­கான விழிப்­பு­ணர்வு குறித்­தும் நமக்கு உணர்த்­தி­யுள்­ள­தா­கத் அவர் தெரி­வித்­துள்ளார்.