வேலை, குடும்பக் கடப்பாடுகளில் மாதர்க்கு நியாயமான தெரிவுகளை மேற்கொள்ள மாதர்க்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்று
பெண்கள் மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல்களில் இறுதியில் பேசிய பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
"மாதர் தங்கள் முழு ஆற்றலை அடைய, அவர்கள் தங்களை நிரூபிக்க அவர்களுக்கு சமவாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். நமக்குள்ளே இருக்கும் பாகுபாடுகள் அவர்களுக்கு தடைக்கற்களாக விளங்கக்கூடாது. வேலையிடத்தில் அவர்களுக்கு ஏற்படக்கூடிய பாகுபாடு அல்லது அநியாயமான நடத்தைக்கு எதிராக பெண்களைப் பாதுகாப்போம்," என்று அவர் கூறினார்.
சிங்கப்பூரில் பெண்களில் நிலைமை பெருமளவில் வளர்ந்துள்ள போதிலும் பெண்களுக்கு எதிரான மனப்போக்கில் சமுதாயம் நவீன நிலைக்கு வந்துவிடவில்லை. அவர்கள் தொடர்பான எதிர்பார்ப்புகளும் சமநிலையை அடையவில்லை என்றார் அவர்.
கடந்த ஆண்டு அரசாங்கம் ஏற்பாடு செய்த 160 கலந்துரையாடல்களில் இருந்து கிடைத்த கருத்து சேகரிப்பில் 37 விழுக்காடு வேலையிடத்தில் பெண்களுக்கு சமவாய்ப்புகள் வழங்கப்படுவது தொடர்பானது என்று நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் கல்வி துணை அைமச்சர் சுன் ஸுலிங் தெரிவித்தார்.
கலந்துரையாடலில் வேலையிடத்தில் பணியமர்த்தல், பதவி உயர்வு, ஊழியரணியில் பங்குகொள்ள பெண்களை ஊக்குவிக்க அவர்களுக்கு நீக்குப்போக்கான வேலை ஏற்ாபடுகள், தலைமைத்துப் பொறுப்புகளில் கூடுதல் பெண் பிரதிநித்துவம் போன்றவை எழுப்பப்பட்ட முக்கிய பிரச்சினைகள் என்று திருவாட்டி சுன் தெரிவித்தார்.
இதில் பேசிய டாக்டர் ஃபிர்சா அஸ்லாம், பிள்ளைகளை வளர்ப்பு, பராமரிப்பாளராக இருக்கும்போது பெண்கள் அடிக்கடி எடுக்க நேரிடும் பணிவிடுப்பு போன்றவை பணியமர்த்தும்போது அவர்களுக்கு எதிராக கருத்தில் ெகாள்ளப்படுவதாக அச்சம் தெரிவிக்கின்றனர் என்றார்.
பெண்கள் தொடர்பாக நட்புவட்ட, வேலைப் பணி ஆலோசனை நிறுவனத்தின் இணை நிறுவனரான இவர், பெரும்பாலான நேரங்களில் பணியமர்த்தும் மேலாளர்கள் இவர்கள் வேலையிடச் சூழலை புரிந்து கொள்வதில் பின்தங்கிய நிலையில் இருப்பதாகவோ, அண்மைய வந்துள்ள வேலை குறித்த தகவல்கள் பற்றி அறிந்திராமலோ இருப்பதாக நிைனக்கக்கூடும் என்று கூறுகிறார்.
"இது மனப்போக்கு பற்றியது, பணிவிடுப்பு காலத்தை பின்தங்கிய நிலைக்கு தள்ளிவிட்டுள்ளதாக நினைக்காமல் இருத்தல் வேண்டும்," என்று விளக்கினார்.
மாதர்க்கு ஆதரவு தெரிவிக்க இணையத் திட்டம்
இதன் தொடர்பில் மக்கள் செயல் கட்சி நேற்று 'ஏக்ஷன் ஃபார் ஹர்' என்ற இணைய திட்டம் ஒன்றை அறிவித்தது. இதில் பொதுமக்கள் மாதர்களுக்கு ஆதரவு தெரிவிக்க அழைப்பு விடுத்தது அந்தக் கட்சி.
நேற்று நடைபெற்ற மக்கள் செயல் கட்சியின் மாதர் பிரிவு மாநாட்டில் இந்தத் திட்டத்தை அக்கட்சி அறிவித்தது.
இதில் பங்குபெற எண்ணுவோர், #ActionForHerwebsite என்ற இணையத்தளத்திற்குள் செல்லலாம். அதில் அவர்கள் வாழ்வில் சந்திக்கும் ஒரு பெண் குறித்து அவர்களிடம், "இந்தப் பெண்ணுக்காக நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்களா?" என்ற கேள்வி கேட்கப்படும்."உங்களது நடவடிக்கை, அது பெரிதோ, சிறியதானதோ, அவருக்கு அவரின் எதிர்காலத்துக்கு ஒரு மாறுதலை ஏற்படுத்தும்" என்ற இயக்க வாசகம் இருக்கும்.
மக்கள் செயல் கட்சியின் மாதர் பிரிவுத் தலைவி ஜோசஃபின் தியோ, #ActionForHerwebsite என்ற இணையத்தளத்தை தொடங்கி மாதர்களுக்கு அனைத்து சிங்கப்பூரர்களும் ஆதரவு தர உறுதி ஏற்குமாறு கோரிக்கை விடுத்தார்.