'யூரோ' சூதாட்டம்: 1,400 பேர் கைது; $10.7மி. சிக்கியது

'யூரோ' சூதாட்டம்: 1,400 பேர் கைது; $10.7மி. சிக்கியது

1 mins read
0d1c6f7b-eaf9-475e-905c-4968158a4650
-

காற்­பந்து தொடர்­பான சட்ட விரோ­த­ சூதாட்­டத்­திற்கு எதி­ரக 'இன்­டர்­பொல்' எனப்படும் அனைத்துலக போலிஸ் மேற்­கொண்ட நட­வடிக்­கை­யில் சிங்­கப்­பூர்க் காவல் துறை­யும் பங்காற்­றி­யது.

'யூஏஃபா' ஐரோப்­பிய காற்­பந்­தாட்ட போட்­டி­களின்போது நடத்­தப்­பட்ட இந்­நட­வ­டிக்­கை­யில் ஆசி­யா­வை­யும் ஐரோப்­பா­வை­யும் சேர்ந்த ஏற­த்தாழ 1,400 பேர் கைது செய்யப்­பட்­ட­னர். மேலும், $10.7 மில்­லி­யன் சிக்கியது.

இதில் சம்­பந்­தப்­பட்­டோர் கிட்­ட­தட்ட $465 மில்­லி­யன் (அமெ­ரிக்க டாலர்) அள­வி­லான பணத்­தைக் கையாண்­டுள்­ள­னர் என சிங்­கப்­பூர்க் காவல் துறை நேற்று வெளி­விட்ட அறிக்­கை­யில் தெரிவித்தது.

மேலும் காற்­பந்து சூதாட்­டத்­தின் தொடர்­பில் காவல் துறை ஜூன் 11லிருந்து ஜூலை 31 வரை சிங்­கப்­பூ­ரில் மேற்­கொண்ட நட­வடிக்­கை­களில் 72 பேர் கைது செய்­யப்­பட்­ட­துடன், $800,000 மேற்­பட்ட ரொக்­கப் பணம், கணி­னி­கள், கைபே­சி­கள் போன்­ற­வை­யும் பறி­மு­தல் செய்யப்­பட்டன.

கைது செய்­யப்­பட்ட அனை­வர் மீதும் விசா­ரணை நடத்தி வரு­வ­தா­கக் காவல் துறை கூறி­யுள்­ளது.

சட்ட விரோ­த­மாக வெளி­நாட்டு சூதாட்­டத்­தில் (ரிமோட் கேம்­ப­லிங்) கலந்­து­கொள்­வோ­ருக்கு $5,000 அப­ரா­தம், ஆறுமாத சிறைத் தண்டனை அல்­லது இரண்­டும் விதிக்­கப்­ப­ட­லாம்.

சட்ட விரோ­த­மான சூதாட்டத்­திற்­குத் துணை புரிந்த குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் $20,000லிருந்து $200,000 வரை அப­ரா­தம், ஐந்­தாண்டு சிறைத் தண்­டனை அல்­லது இரண்­டும் விதிக்­கப்­ப­ட­லாம்.