இலவச முகக்கவசங்களை 'தெமாசெக்' அறநிறுவனம் விநியோகிக்கத் தொடங்கிய சில நாட்களுக்குப் பிறகு, அவற்றை பெற்றுக்கொள்ள 56 வயது திருமதி சியோங் லீ லீ 'நார்த்பாயிண்ட்'ல் அமைந்துள்ள 'கோல்ட்ஸ்டோரெஜ்' பலசரக்குக் கடைக்குச் சென்றார். ஆனால் இருப்புகள் தீர்ந்து விட்டன. வேறொரு நாள் வேலை முடிந்து அதே இடத்துக்கு எட்டு மணிக்குப் பிறகு அவர் சென்ற போது முகக்கவசத்தை விநியோகம் செய்யும் இடம் மூடிவிட்டது.
புதன்கிழமையன்று 'நெக்ஸ்' கடைத்தொகுதிக்குச் சென்றபோது ஒரு வழியாக இலவச முகக்கவசங்களை அவர் பெற்றுக்கொண்டார்.
அடுத்த ஞாயிற்றுக்கிழமையோடு 'தெமாசெக்' அறநிறுவனம் இலவச முகக்கவசத்தின் விநியோகிப்பு முடிவு பெறும். செப்டம்பர் 14ஆம் தேதி நிலவரப்படி 2.6 மில்லியனுக்கும் மேற்பட்ட முகக்கவசப் பெட்டிகளை மக்கள் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இந்த விநியோகம் தொடங்கிய ஆகஸ்ட் 26ஆம் தேதி அன்றே 105,000 குடும்பங்கள் இலவச முகக்கவசங்களைப் பெற்றுக்கொண்டனர்.
அன்றிலிருந்து ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டன.
ஒவ்வொரு குடும்பமும் 50 மருத்துவத்தர முகக்கவசங்களையும் 25 'என்95' முகக்கவசங்களையும் பெற்றுக்கொள்ளலாம். இவற்றை மக்கள் குறிப்பிட்ட 'கேபிட்டாலேண்ட்' பேரங்காடிகளிலிருந்தும் பலசரக்குக் கடைகளிலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.
ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் சென்ற மூன்று கிளைகளிலும் நீண்ட வரிசைகள் காணப்படவில்லை.
பொது மக்கள் 'எஸ்பி' மின் கட்டண சான்றையும் பெற்றுக்கொள்ளும் முகக்கவசங்களை எடுத்துச்செல்ல பையையும் எடுத்து வரவேண்டும்.

