வெளிநாட்டு ஊழியர்களுக்காகப் புதிதாகக் கட்டப்படும் தங்கு விடுதிகளுக்கு மேம்படுத்தப்பட்ட தரநிலையை மனிதவள அமைச்சு செப்டம்பர் 17ஆம் தேதி அறிவித்தது.
இதையடுத்து, சிங்கப்பூர் தங்கு விடுதி நடத்துநர்களும் முதலாளிகளும் உயரவிருக்கும் செலவினம்குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டு ஊழியர் குழுக்கள் சிறிய தங்கு விடுதிகளில் இம்மாற்றங்களை செய்வதை வரவேற்றபோதும் அவற்றால் எந்த குறிப்பிடதக்க மேம்பாடும் இருக்காது என கூறியது.
'பிபிடி' எனப்படும் குறிப்பிட்டக் காரணங்களுக்காகக் கட்டப்படும் விடுதிகளில் முதல் இரண்டு விடுதிகள் அரசாங்கத்தால் கட்டடப்பட்டவிருந்தாலும் அவ்விடுதிகளை நடத்தவும் வாடகைக்கு விடவும் தேவைப்படும் கூடுதல் செலவுகள் நடத்துநர்களைச் சென்றடையும்.
உயரும் செலவினத்தை நடத்துநர்கள், முதலாளிகள் அரசாங்கம், நுகர்வாளர்கள் போன்ற சம்பந்தப்பட்ட அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என, எட்டுத் தங்கு விடுதிகளை நடத்தும் 'சென்டோரியன் கார்ப்பரேஷன்' கூறியது.
ஆயினும், செலவுகள் உயர்ந்தாலும் தரமான தங்குவிடுதிகளுக்கு அதிக தேவை இருக்கிறது என அதன் தலைமை நிர்வாகி திரு கோங் சி மின் ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸிடம் கூறினார்.
சிங்கப்பூர் தங்கு விடுதி சங்கம் வெளிநாட்டு ஊழியர்களின் தேவைகளை அறிந்துகொண்டு தற்போதுள்ள தங்கு விடுதிகளில் மாற்றங்கள் ஏற்படுத்த ஆய்வுகள் மேற்கொள்ளும். 'ஆர்டி குரூப்'பின் இயக்குநரான திரு யுஜீன் ஆவ், ஒவ்வொரு அறையிலும் கழிப்பறையைக் கட்டுவது சவாலாக அமையும் என்றார்.
மேலும் ஒரு கழிப்பறையைக் கட்ட சுமார் $30,000 செலவாகும் என்றும் கூறினார். இத்தொகையை 20லிருந்து 30 அறைகள் வரை ஒப்பிடும்போது சிறிய தங்கு விடுதி நடத்துநர்கள் சமாளிக்க சிரமம் ஏற்படலாம் என்றும் குறிப்பிட்டார்.
நிதியுதவித் திட்டங்கள் குறித்து ஏதேனும் அறிவிப்பு வந்தால் உடனே பணிகளைத் தொடங்க தாம் திட்ட மிடுள்ளதாகவும் விளக்கினார்.
'கொரி ஹோட்டிங்ஸ்'உடைய தலைமை நிர்வாகி திரு ஹூய் யூ கோ தமது ஊழியர்களுக்காக கூடுதல் கட்டணம் செலுத்துவதில் தமக்கு எந்த சிரமம் இல்லை என்றார். ஆனால், கட்டண உயர்வு கட்டுப்படியாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். தற்போது அவர் தமது 170 ஊழியர்கள் ஒவ்வொரு வருக்கும் மாதம் $350 கட்டணம் செலுத்துகிறார். அது $400 ஆக உயர்ந்தால் எந்த சிரம்மும் இல்லை என்றார்.