கட்டுமானத் தளத்தில் இருந்த சிமெண்ட் வாகனத்தின் அடியில் 37 வயது ஆடவர் ஒருவர் சிக்கிக்கொண்டார். அவர் சம்பவ இடத்திலேயே மாண்டார்.
சம்பவம், பிடோக் 'ஆக்டிஃப்எஸ்ஜி ஸ்டேடியம்' இருக்கும் 1 பிடோக் நார்த் ஸ்ட்ரீட் 2ல் நிகழ்ந்தது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு செப்டம்பர் 17ஆம் தேதி மாலை 5.55 அளவில் உதவிக்கு அழைப்பு வந்தது.
மீட்பு சாதனங்களைப் பயன்படுத்தி ஆடவரை மீட்டனர். விபத்து நடந்த இடத்தில் சுமார் எட்டு போலிஸ் வாகனங்கள் காணப்பட்டன.
மனிதவள அமைச்சு புலனாய்வாளர்களும் சம்பவ இடத்தில் காணப்பட்டனர்.
கவனக்குறைவினால் மரணம் விளைவித்தாக போலிசார் 26 வயது ஆடவர் ஆடவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

