சிங்கப்பூருக்கு வர தடுப்பூசி போட்டுக்கொண்ட 2,322 பயணிகளுக்கு அனுமதி

1 mins read
6892ae1a-7da3-4d55-ab0b-6bdd20ebf522
-

கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட 2,322 பய­ணி­க­ளுக்கு சிங்­கப்­பூ­ருக்கு வர அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

இவர்­கள் ஜெர்­மனி, புருணை ஆகிய நாடு­க­ளைச் சேர்ந்­த­வர்­கள்.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கான பய­ணப் பாதைத் திட்­டத்­தின்­கீழ் இப்­ப­ய­ணி­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

புதிய பயண ஏற்­பாட்­டின்­கீழ் விண்­ணப்­பம் செய்­யப்­படும் முறை தொடங்கி 16 நாட்­களில் சிங்­கப்­பூ­ருக்கு வர இவர்­க­ளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த வியா­ழக்­கி­ழமை இரவு 11.59 மணி நில­வ­ரப்­படி ஜெர்­ம­னி­யைச் சேர்ந்த 2,241 பய­ணி­க­ளுக்­கும் புரு­ணை­யைச் சேர்ந்த 81 பேருக்­கும் இம்­மா­தம் 8ஆம் தேதிக்­கும் அடுத்த மாதம் 22ஆம் தேதிக்­கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் சிங்­கப்­பூ­ருக்­குப் பய­ணம் மேற்­கொள்ள அனு­மதி தரப்­பட்­டுள்­ளது.