'சிங்கப்பூர் பூல்ஸ்' கிளை தற்காலிகமாக மூடப்பட்டது

'சிங்கப்பூர் பூல்ஸ்' கிளை தற்காலிகமாக மூடப்பட்டது

1 mins read
3c72faa7-f047-4fa1-a747-8eb00e6d6a69
-

தோ பாயோ வட்­டா­ரத்­தில் உள்ள சிங்­கப்­பூர் பூல்ஸ் கிளை­யில் பணி­பு­ரி­யும் ஊழி­ய­ருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­பது கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று உறுதி செய்­யப்­பட்­டதை அடுத்து, அக்­கிளை தற்­கா­லி­க­மாக மூடப்­பட்­டுள்­ளது.

புளோக் 111 தோ பாயோ லோரோங் 1ல் உள்ள அந்­தக் கிளை சுத்­தம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக பந்­த­யப் பிடிப்பு நிறு­வ­ன­மான சிங்­கப்­பூர் பூல்­ஸின் செய்­தித்

தொடர்­பா­ளர் தெரி­வித்­தார். தோ பாயோ லோரோங் 4ல் உள்ள இரு கிளை­க­ளுக்­குச் செல்­லு­மாறு மூடப்­பட்­டுள்ள கிளைக்கு வெளி யே அறிவிப்பு ஒட்­டப்­பட்­டுள்­ளது. கடந்த ஜூன் மாதம் இரு

விளை­யாட்­டுத் துறை பந்­த­யப்

பிடிப்­புக் கிளை­க­ளுக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட ஒரு­வர் சென்­றதை அடுத்து, அவை மூடப்­பட்­டன.