வெஸ்ட் கோஸ்ட் வட்டாரத்தில் உள்ள ஆயர் ராஜா உணவங்காடி நிலையத்தில் சில கடைக்காரர்
களுக்கும் துப்புரவுப் பணியாளர்
களுக்கும் கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அந்த உணவங்காடி நிலையம் நாளை மறுநாள் வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புளோக் 503 வெஸ்ட் கோஸ்ட் டிரைவில் உள்ள அந்த உணவங் காடி நிலையம் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும் என்று தொடர்பு, தகவல் அமைச்சரும் வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ். ஈஸ்வரன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று பதிவிட்டார். "கடைக்காரர்கள், வாடிக்கையாளர்கள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதி செய்ய, உணவங் காடி நிலையம் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்பு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும்," என்றார் அமைச்சர் ஈஸ்வரன்.
உணவங்காடி நிலையத்தில் எத்தனை பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

