புளோக் 210 தோ பாயோ லோரோங் 8ல் அமைந்துள்ள ஈரச்சந்தை, உணவங்காடி நிலையத்தில் கடைக்காரர்களுக்கும் துப்புரவுப் பணியாளர்களுக்கும் கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து, அவை மூடப்பட்டுள்ளன. ஈரச்சந்தையும் உணவங்காடி நிலையமும் சுத்தம் செய்யப்படும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் நேற்று முன்தினம் தெரிவித்தது.
"பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுவதை நாங்கள் தொடர்ந்து உறுதி செய்வோம். "அதிகமானோர் பயன்டுத்தும் மின்தூக்கிப் பொத்தான்கள் மீது சுயமாக சுத்தம் செய்து கொள்ளும் கிருமி நாசினிப்
பூச்சைக் கடந்த ஆண்டிலிருந்து பீஷான்-தோ பாயோ நகர மன்றம் பூசி வருகிறது. பாதிப்பட்டோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தோரை அடையாளம் காண ஈரச்சந்தைகளுக்குள் செல்லும் அனைவரும் டிரேஸ்டுகெதர் மூலம் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது," என்று அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சக்தியாண்டி சுபாட் தெரிவித்தார்.

