மாணவரின் தமிழ்மொழிப் புழக்கத்தைச் செம்மைப்படுத்துவது மட்டுமின்றி சிந்தனைத் திறன், குழு உணர்வு, இயல்பாக உரையாடும் திறன் ஆகியவற்றை ஊக்குவிப்
பதற்காக இளையர் பட்டிமன்றம் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்ததாக 'தமிழர் தகவல் தொழில்நுட்ப சமுதாயம்' தெரிவித்தது.
13 வயது முதல் 35 வயது வரையிலானோருக்கான இந்த நிகழ்வு, ஒரு வாரமாக நடைபெற்றது. 32 பேச்சாளர்கள், நான்கு பேர் கொண்ட எட்டுக் குழுக்களாகப் பங்கேற்றனர்.
விவாதப் போட்டியைப் போல் அல்லாமல், பட்டிமன்ற பாணியில் உள்ள தர்க்கங்களுக்குப் பதிலாக கருத்துப் பரிமாற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக ஏற்பாட்டாளர் மா கோவிந்தராஜூ தெரி வித்தார்.
"இதில் பங்கேற்ற பெரும்பாலான இளையர்கள், பட்டிமன்றத்தில் கலந்துகொண்டது இதுவே முதல் முறை. அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும் ஒரு வாய்ப்பாக இது அமைந்தது," என்று அவர் கூறினார்.
குழுக்களிடையே போட்டித்தன்மை இருந்தாலும் இதனால் மொழி ஆர்வமும் பேச்சுத்திறனும் வளர்வதாக ராஃபிள்ஸ் கல்வி நிலையத்தைச் சேர்ந்த பிரசன்னா தெரிவித்தார்.

