வெளிநாட்டு ஊழியரின் தனிமைக் கால தீர்வை தள்ளுபடி டிசம்பர் வரை நீட்டிப்பு

வெளிநாட்டு ஊழியரின் தனிமைக் கால தீர்வை தள்ளுபடி டிசம்பர் வரை நீட்டிப்பு

2 mins read
965ddc08-047c-4d74-87a6-8faf8e269f84
தீர்வை தள்ளுபடி காலம் செப்டம்பரில் முடிவடைய இருந்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

எஸ்-பாஸ் மற்­றும் வேலை அனு­மதிச் சீட்டு வைத்துள்ள வெளி­நாட்டு ஊழி­யர்­கள் கொவிட்-19 தொற்று கார­ண­மாக தனி­மை­யில் இருக்­கும் காலத்­திற்கு அவர்­க­ளுக்­கான தீர்­வையை முத­லா­ளி­கள் செலுத்த வேண்­டாம் என்று அர­சாங்­கம் சலுகை அளித்­துள்­ளது.

அந்­தச் சலு­கைக் காலம் இந்த மாதத்­து­டன் முடி­வ­டைய இருந்­தது.

அத்­த­கைய ஊழி­யர்­க­ளின் முத­லா­ளி­கள் அந்­தச் சலு­கையை இந்த ஆண்டு இறுதி வரை பெற­லாம் என்று இப்­போது அர­சாங்­கம் அறி­வித்­துள்­ளது.

முத­லா­ளி­கள் ஊழி­யர்­க­ளைப் பாது­காப்­பாக அழைத்து வர­வும் நிலை­மைக்கு ஏற்ப தங்­க­ளைச் சரி­செய்­து­கொள்ள மேலும் கால அவ­காசம் அளிக்­க­வும் ஊழி­யர்­கள் தனி­மை­யில் இருப்­ப­தால் ஏற்­ப­ட­கூ­டிய செல­வு­க­ளைச் சமா­ளிக்­க­வும் உத­வும் நோக்­கத்­தில் இந்­தச் சலுகை மேலும் நீட்­டிக்­கப்­படுகிறது என்று மனித வள அமைச்­சர் டான் சீ லேங் தெரி­வித்­துள்­ளார்.

வர்­த­தக தொழில் இரண்­டா­ம் அமைச்­ச­ரு­மான டாக்­டர் டான், கொவிட்-19 கார­ண­மாக படு­மோ­ச­மாக பாதிக்­கப்­பட்­டுள்ள கட்­டு­மானத் துறைக்கு உதவுவதும் இதன் நோக்­கம் என்று கூறி­னார்.

தீர்வை தள்­ளு­படி சலுகை வீட்டு வேலை பணிப்பெண்­க­ளுக்­கும் பொருந்­தும்.

அமைச்­சர் டாக்­டர் டான், நேற்று சிங்­கப்­பூர் நிலச்­சொத்து மேம்­பாட்­டா­ளர்­கள் சங்­கத்­தின் நிகழ்ச்சி ஒன்­றில் பேசி­னார். கட்­டு­மா­னத் துறை எதிர்­நோக்­கும் கடு­மை­யான மனிதவளப் பற்­றாக்­குறை பற்­றி­யும் அதைச் சமா­ளிக்க நிறு­வ­னங்­களுக்கு அர­சாங்­கம் அளிக்­கும் ஆத­ரவு, உத­வி­கள் குறித்­தும் அவர் விளக்­கி­னார்.

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கான தீர்வை தள்­ளு­படி, கழி­வு­கள் ஒரு புறம் இருக்க, வேலை ஆத­ர­வுத் திட்­டம் மூல­மா­க­வும் $1.36 பில்லி­யன் கட்­டு­மா­னத்­துறை ஆத­ரவு திட்­டம் வழி­யா­க­வும் நிறு­வ­னங்­கள் பலன் பெற முடி­யும்.

புதிய தங்­கு­வி­டு­தி­களில் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு வசிப்­பிட சூழல் மேம்­பட்டு இருக்­கிறது என்­பதை அமைச்­சர் சுட்­டிக்­காட்­டி­னார்.

கட்­டு­மா­னத்­துறை மேலும் மீள்­தி­ற­னு­டன் திகழ வேண்­டு­மா­னால் மின்­னி­லக்­க­ம­யம், தானி­யக்­க­ம­யம் மூலம் அந்­தத் துறை உற்­பத்­தித்­தி­ற­னைப் பெருக்க வேண்­டும்.

அதோடு மட்­டு­மின்றி, சிங்­கப்­பூ­ரர்­களை ஆத­ார­மா­கக் கொண்ட ஊழி­யர் அணி­யைப் பலப்­ப­டுத்த வேண்­டும் என்­றும் டாக்­டர் டான் வலி­யு­றுத்­தி­னார்.

வாழ்க்­கைத் தொழி­லின் நடு­வில் வேறு துறைக்கு மாறி வேலை பெற முய­லும் சிங்­கப்­பூ­ரர்­களை வேலை­யில் சேர்க்க நிறு­வ­னங்­கள் பரி­சீ­லிக்க வேண்­டும் என்­றும் அவர் கோரிக்கை விடுத்­தார்.