துவாஸ் வெடிப்பு: இயந்திரத்துடன் தொடர்பு

துவாஸ் வெடிப்பு: இயந்திரத்துடன் தொடர்பு

3 mins read
e69fd672-f5a4-489c-8398-0f057f5904b8
வெடிப்பு நேர்ந்தபோது ஊழியர்கள் கட்டடத்தின் முதல் மாடியில் நடந்த பயிலரங்கில் இருந்தனர். கோப்புப்படம்/ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கடந்த பிப்­ர­வரி மாதம் துவாஸ் தொழில்­து­றைக் கட்­ட­டத்­தில் நேர்ந்த வெடிப்­பு­ச் சம்­பவம், முன்­ன­தா­கத் தீப்பி­டித்­திருந்த ஓர் இயந்­திரத்­து­டன் தொடர்­புடையது எனத் தெரி­ய­வந்­துள்­ளது. உட­லின் 90 விழுக்­காட்­டுப் பகு­தி­யில் மோச­மான தீக்காயங்கள் ஏற்பட்டு மூவர் மாண்­ட­னர். வெடிப்பு பயங்­க­ர­மாக இருந்­த­தால் கட்­ட­டத்­தின் சன்­னல்­கள் நொறுங்கி வீசி­யெ­றி­யப்­பட்­டன, சுவர் ஒன்று இடிந்து விழுந்­தது, மற்­றொரு சுவ­ரில் பெரிய துவா­ரம் உரு­வானது.

மாண்­டோ­ரில் ஒரு­வ­ரான 38 வயது திரு சுப்­பை­யன் மாரி­முத்து, சம்­பந்­தப்­பட்ட இயந்­தி­ரத்­தின் மேல் இருந்த பழு­தான கரு­வி­யைப் பட­மெ­டுத்து பொறி­யா­ளர் ஒருவ­ருக்கு அனுப்­பி­யி­ருக்­கி­றார். ஆனால் விபத்துக்குப் பிறகு திரு லுவின் மோ துன் என்ற பொறி­யா­ளர் அந்­தப் படத்­தைத் தனது கைபே­சி­யி­லி­ருந்­தும் திரு சுப்­பை­ய­னின் கைபேசி­யி­லிருந்­தும் அழித்­தி­ருக்­கி­றார் என்­பது நீதி­மன்ற விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ளது.

மாண்ட மூன்று 'ஸ்டார்ஸ் எஞ்­சி­னி­ய­ரிங்' நிறு­வ­னத்­தின் ஊழி­யர்­களும் இந்­தியா, பங்­­ளா­தேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்­த­வர்­கள். நீதி­மன்ற விசா­ரணை தொடங்­கும்­போது அவர்­க­ளுக்­காக ஒரு நிமிட மௌன அஞ்­சலி செலுத்­து­மாறு மூத்த மாவட்ட நீதி­பதி ஓங் ஹியான் சுன் கேட்­டுக்­கொண்­டார். சிங்­கப்­பூ­ருக்கு அவர்­கள் ஆற்­றிய பங்­கிற்கு நன்றி கூறிய நீதி­பதி ஓங், அவர்­க­ளுக்கு நெருக்­க­மா­ன­வர்­க­ளுக்கு ஆழ்ந்த அனு­தா­பங்­க­ளைத் தெரி­வித்­துக்­கொண்­டார்.

32ஈ துவாஸ் அவென்யூ 11ல் உள்ள கட்டடத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதியன்று காலை சுமார் 11.20 மணிக்கு விபத்து நேர்ந்தது.

அப்போது கட்டடத்தின் முதல் மாடியில் நடத்தப்பட்ட பயிலரங்கில் மாண்ட மூவரும் இருந்திருக்கின்றனர்.

மொத்­தம் 10 பேர் காய­முற்­ற­னர். அவர்­களில் ஐவர் 'ஸ்டார்ஸ் எஞ்­சி­னி­ய­ரிங்' நிறு­வ­னத்­தின் ஊழி­யர்­கள்.

கட்­ட­டத்­தில் இருந்த சம்பந்தப்பட்ட இயந்­தி­ரத்­தைப் பற்றி அரசு தரப்பு வழக்­க­றி­ஞர் கிறிஸ்டி டான் விசா­ர­ணை­யில் விவரித்தார். அந்த இயந்­தி­ரம் அலி­பாபா மின்­வர்த்­த­கத் தளத்­தி­லி­ருந்து 2019ஆம் ஆண்­டு வாங்­கப்­பட்­டது.

எண்­ணெய்யைச் சூடாக்க இயந்­தி­ரத்­தில் ஒன்­பது 'ஹீட்­டர்' எனப்­படும் சூடாக்­கும் கரு­வி­கள் இருந்­தி­ருக்­கின்­றன.

'ஸ்டார்ஸ் எஞ்­சி­னி­ய­ரிங்' அவற்­றுக்­குப் போது­மான எண்­ணெய்யைப் போடாமல் இருந்­தி­ருக்­க­லாம் எனத் தெரி­ய­வந்­தது.

இயந்திரம் சென்ற ஆண்டு ஜூன் மாதம் சோதனையிடப்பட்டது. சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்தில்தான் அது முழுமையாகப் பயன்படுத்தப்பட்டது.

சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் எட்­டாம் தேதி­யன்று இயந்­தி­ரம் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­போது சூடாக்­கும் கருவி தீப்­பொ­றி­யை­யும் புகை­யை­யும் வெளி­யிட்­டி­ருக்­கிறது. 'ஸ்டார்ஸ் எஞ்­சி­னி­ய­ரிங்' நிறு­வ­னத்­தின் முன்­னாள் ஊழி­ய­ரான திரு இமாம், இயந்­தி­ரத்­தில் எண்­ணெய்­யின் அளவு குறைந்­த­தா­க­வும் எறிந்­து­போ­ன­தால் சூடாக்­கும் கம்­பி­களில் ஒன்று வளைந்­து­போ­ன­தா­க­வும் குறிப்­பிட்­டார்.

ஆகஸ்ட் 28ஆம் தேதி­யன்று இயந்­தி­ரத்­தி­லி­ருந்து மீண்­டும் புகை வெளி­வந்­த­தா­கத் திரு இமாம் தெரி­வித்­தார்.

சென்ற ஆண்டு செப்­டம்­பர் மாதம் 21ஆம் தேதி­யன்­றும் இயந்­தி­ரத்­தி­லி­ருந்து புகை வெளி­வந்­தி­ருக்­கிறது.

அதற்கு ஒரு வாரத்­திற்­குப் பிறகு இயந்­தி­ரத்­தின் முன்பகு­தி­யி­லி­ருந்து கசிவு ஏற்­பட்­டதை ஊழி­யர்­கள் கவ­னித்­தி­ருக்­கின்­ற­னர். ஆனால் அது உட­ன­டி­யா­கச் சரி­செய்­யப்­ப­ட­வில்லை.

இச்­சம்­ப­வங்­க­ளுக்­குப் பிற­கும் இவ்­வாண்டு ஜன­வரி மாதம் வரை இயந்­தி­ரத்­தில் கோளா­று­கள் ஏற்­பட்­டி­ருக்­கின்­றன. பிப்­ர­வரி மாதம் விபத்து நேர்ந்­தது.

இந்த விபத்து நேர்ந்­தி­ருக்­கவே கூடாது என்­றும் மறு­ப­டி­யும் இது­போன்ற சம்­ப­வம் நிக­ழக்­கூ­டாது என்­றும் அரசு தரப்பு வழக்­க­றி­ஞர் திரு­வாட்டி டான் கூறி­னார்.