சிங்கப்பூர் காற்பந்து நட்சத்திரம் முகமது நோ காலமானார்

சிங்கப்பூர் காற்பந்து நட்சத்திரம் முகமது நோ காலமானார்

2 mins read
24ac9127-3027-4086-9a65-67361a955998
1970களில் பிரபல காற்பந்து வீரரான முகமது நோ ஹுசேன் நேற்று காலமானார். கோப்புப்படம்/ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

முன்­னாள் தேசிய காற்­பந்து வீர­ரான முக­மது நோ ஹுசேன் மார­டைப்­பால் நேற்று கால­மா­னார். அவ­ருக்கு வயது 67.

1979களில் சிங்கப்பூரர்களிடையே பிரபலமாக இருந்த இவர் செங்காங் பொது மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

மாட் நோ எனச் செல்லமாக அழைக்கப்பட்ட இவர், 1977ஆம் ஆண்டில் மலேசிய கிண்ணத்தைக் கைப்பற்றிய சிங்கப்பூர் அணியில் இடம்பெற்றார்.

தமது சிறப்­பான விளை­யாட்­டால் கண்­க­வர் பல­ரைக் கவர்ந்­த­வர் மாட் நோ.

1977ஆம் ஆண்­டில் ஆசி­யா­வின் ஆகச் சிறந்த அணி­களில் ஒன்­றாக மலே­சியா கரு­தப்­பட்­டது. அந்த ஆண்டு மார்ச் மாதம் ஆறாம் தேதி­யன்று காலாங் விளை­யாட்­ட­ரங்­கில் நடை­பெற்ற உல­கக் கிண்­ணத் தகுதி ஆட்­டத்­தில் அப்­ப­டிப்­பட்ட மலே­சிய அணிக்கு எதி­ராக பெனால்டி மூலம் வெற்றி கோலை அடித்­தார் மாட் நோ. அந்த அரு­மை­யான தரு­ணத்தை நினை­வு­கூர்ந்து ஃபேஸ்புக் பதி­வில் அவ­ரைக் கௌர­வித்­தது சிங்­கப்­பூர் காற்­பந்­துச் சங்­கம். மாட் நோவின் குடும்­பத்­தா­ருக்­கும் அவ­ருக்கு நெருக்­க­மா­ன­வர்­க­ளுக்­கும் சங்­கம் அதன் ஆழ்ந்த அனு­தா­பங்­க­ளைத் தெரி­வித்­துக்­கொண்­டது. 1988ல் மாட் நோ பிரபல உள்ளூர் பாடகியான ரஹிமா ரஹிமை மணமுடித்தார்.

ஆனால் 11 ஆண்டுகளுக்குப் பின் இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.

1981ஆம் ஆண்­டுக்­குப் பிறகு மாட் நோ காற்­பந்­தி­லி­ருந்து விலகத் தொடங்­கி­னார்.

முன்னாள் தேசிய காற்பந்துப் பிரபலமான டேரி என்றழைக்கப்படும் திரு பத்மநாதன் தம்பையா 1979 முதல் 1981ஆம் ஆண்டு வரை மாட் நோவுடன் சிங்கப்பூர் தேசிய குழுவில் விளையாடியவர்.

1980ஆம் ஆண்­டில் மலே­சி­யக் கிண்­ணத்தை சிங்­கப்­பூர் வென்­ற­போது டேரி­யும் மாட் நோவும் ஓரே அணி­யில் இருந்­த­னர்.

"மாட் நோ திட­லுக்கு வலது பக்­கத்­தில் தாக்­கு­தல் ஆட்­டக்­கா­ர­ராக சிறப்­பாக விளை­யா­டி­னார். எதிர் அணி அவ­ரின் ஆட்­டத்­தைக் கட்­டுப்­ப­டுத்த பெரும் முயற்சி எடுக்­க­வேண்­டும்.

"பந்தைக் கட்­டுக்­குள் கொண்டு வரும் திறன், பந்­து­டன் ஓடும் திறன், வேகம், விளை­யாட்டு பாவனை என்று ஒரு காற்­பந்து வீர­ருக்­கான அனைத்துத் திறன்­களையும் கொண்ட திற­மை­யான ஆட்­டக்­கா­ர­ரா­கத் திகழ்ந்­தார்," என்று புக­ழா­ரம் சூட்­டி­னார் 64 வயது டேரி.

காலஞ்­சென்ற மாட் நோ இறை பக்தி கொண்­ட­வ­ரா­க­வும் மென்­மை­யான குணம் படைத்த மனி­த­ரா­க­வும் இருந்­ததை நினை­வு­கூர்ந்­தார் டேரி.

"பொது­வா­கவே அமை­தி­யா­க­வும் மற்­ற­வர்­க­ளி­டம் அன்­பாக பழ­கும் குணம் உள்­ள­வ­ரா­க­வும் மாட் இருந்­தா­லும், விளை­யாட்டு என்று வரும்­போது மாறு­பட்ட நப­ராக மாறி­வி­டு­வார். திட­லில் நாம் என்ன செய்­ய­வேண்­டும் என்று பலத்த குர­லில் தெரி­விப்­பார்.

"புதி­தாக வரும் ஆட்­டக்­கா­ரர்­களுக்கு நல்ல ஆலோ­ச­னை­களை வழங்­கி­னார். அவர் விளை­யா­டு­வ­தைப் பார்க்க ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் வரு­வார்­கள். இருந்­தா­லும் புகழை அவர் விரும்­பியதில்லை. விளை­யாட்­டி­லேயே கவ­னத்­தைச் செலுத்­தி­னார்," என்­றார் 'ஸ்போர்ட்ஸ் சிங்­கப்­பூர்' அமைப்­பின் மூத்த நிர்­வா­கி­யான டேரி.