மரணத்துக்குப் பிறகு வழக்கறிஞராக கிடைத்த அங்கீகாரம்

மரணத்துக்குப் பிறகு வழக்கறிஞராக கிடைத்த அங்கீகாரம்

1 mins read
71357f66-bbff-4228-bf27-5a5bd615f3d9
திரு விக்ரம் குமார் திவாரி. படம்: ரத்னா மிஷ்ரா -

வழக்­க­றி­ஞ­ராக அங்­கீ­க­ரிக்­கப்­பட இன்­னும் ஒன்­பது நாட்­கள் மட்­டுமே இருந்­த­போது 28 வயது திரு

விக்­ரம் குமார் திவாரி தூக்­கத்­தில் இறந்­தார்.

தமது தந்தை, உற­வி­னர் ஆகி­யோ­ரைப் போல தாமும் வழக்­க­றி­ஞராக வேண்­டும் என்­பது அவ­ரது நீண்­ட­நாள் கனவு என்று அவ­ரது குடும்­பத்­தார் தெரி­வித்­த­னர்.

இந்­நி­லை­யில், இறப்­புக்­குப் பிறகு அவர் வழக்­க­றி­ஞராக அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளார்.

சிங்­கப்­பூ­ரில் இவ்­வாறு நடப்­பது இதுவே முதல்­முறை.

மகன் இறந்த சோகத்­தி­லும் அவ­ருக்­குக் கிடைத்த இந்த அங்­கீ­கா­ரம் மகிழ்ச்­சி­யைத் தரு­வ­தாக திரு திவா­ரி­யின் தாயா­ரான 62 வயது திரு­மதி ரமோத்தி திவாரி கண்­ணீர் மல்க ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழி­டம் கூறி­னார்.

"திரு விக்­ரம் திவாரி மேற்­கொண்ட முயற்­சி­க­ளைக் கருத்­தில் கொள்­ளும்­போது, அவ­ரது விண்­ணப்­பத்தை ஏற்று அவரை வழக்­

க­றி­ஞ­ராக அங்­கீ­க­ரிப்­பதே நியா­ய மா­கும்," என்று உயர் நீதி­மன்ற நீதி­பதி சூ ஹான் டெக் தெரி­வித்­தார்.

அங்­கீ­க­ரிக்­கப்­பட அனைத்­துத் தகு­தி­க­ளை­யும் அவர் கொண்­டி­ருந்­தது மட்­டு­மல்­லாது, வழக்­க­றி­ஞ­ருக்­கான கட்­ட­ணத்­தைச் செலுத்த முடி­யா­தோ­ரைப் பிர­தி­நி­திக்க, வழக்­க­றி­ஞர் சங்­கத்­தின் குற்­ற­வாளி சட்ட உத­வித் திட்­டத்­தின்­கீழ் முழு­நே­ர­மா­கப் பணி­யாற்ற திரு விக்­ரம் திவாரி விண்­ணப்­பம் செய்­தி­ருந்­ததை நீதி­பதி சுட்­டி­னார்.

ஷெஃபீல்டு பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்வி பயின்ற திரு விக்ரம் திவாரி கடந்த மே மாதம் 30ஆம் தேதி அதிகாலை மாண்டார். அவருக்கு எவ்வித உடல்நிலைப் பிரச்சினையும் இல்லை என்று அவரது தந்தை திரு ராம் திவாரி கூறினார்.