வெளிநாட்டு ஊழியர்களைக் கள்ளத்தனமாக வரவழைக்கும் கும்பல்

சட்டவிரோதமாக ஊழியர்களை வரவழைத்ததாக சந்தேகத்தின் பேரில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 14) 12 மணி நேர அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சு அதன் அறிக்கையில் குறிப்பிட்டது.

பொய்யான உறுதிமொழிப் பத்திரங்கள் மூலம் வேலை அனுமதி அட்டை பெற வெளிநாட்டினரை சிங்கப்பூருக்கு அழைத்து வரும் சந்தேகக் கும்பல் ஒன்றிடம் நடத்தப்பட்ட விசாரணையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது.

தீவு முழுவதும் 22 இடங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சட்டவிரோதமாக வேலை அனுமதி அட்டை பெற வெளிநாட்டினர் முயற்சிகள் மேற்கொள்வதாக ஜூலை மாதம் கிடைத்த தகவலைத் தொடர்ந்து விசாரணை முடுக்கிவிடப்பட்டதாக அமைச்சு கூறி உள்ளது.

சில மாதங்கள் மேற்கொள்ளப்பட்ட தீவிர பகுப்பாய்வுகள் மூலம் சந்தேகக் கும்பல் ஒன்று அடையாளம் காணப்பட்டது. இங்கு சட்டபூர்வ தொழில் எதையும் செய்யாத சில போலி நிறுவனங்களை அந்தக் கும்பல் உருவாக்கி இருப்பதும் அவற்றின் மூலம் வேலை அனுமதி அட்டைகளுக்கு விண்ணப்பம் செய்வதும் தெரிய வந்தது.

சட்டவிரோத ஊழியர்களை வேலையில் அமர்த்துவதற்கு ஏதுவாக, நிறுவனங்களின் உள்ளூர் ஊழியர் ஒதுக்கீட்டை சட்டவிரோதமாக ஏற்படுத்தும் நோக்கில் சிங்கப்பூரர்களையும் நிரந்தரவாசிகளையும் வேலைக்கு அமர்த்தியதாகக் காட்டி, அவர்களின் பெயரில் மத்திய சேம நிதிப் பங்களிப்புகளைச் செய்வதிலும் கும்பல் ஈடுபட்டது.

உள்ளூர் ஊழியர்களின் ஒதுக்கீட்டைக் காட்டி அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்த வேலை அனுமதி அட்டைக்கு போலி நிறுவனங்கள் விண்ணப்பிக்கும்.

அதற்குப் பொய்யான உறுதிமொழிப் பத்திரங்களை அவை சமர்ப்பிக்கும். இந்த சட்டவிரோதச் செயலுக்கு வெளிநாட்டினரிடமிருந்து அவை பலன் பெறும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!