தோ பாயோவில் வர்த்தகர்கள், மக்களிடையே கவலை, வருத்தம்

தோ பாயோவில் வர்த்தகர்கள், மக்களிடையே கவலை, வருத்தம்

2 mins read
f8720b8e-51f3-4fa6-8c16-5341007a850b
-

தோ பாயோ­வில் சில இடங்­கள் கொவிட்-19 குழு­மங்­க­ளாக உரு­வெ­டுத்­த­தைத் தொடர்ந்து அங்கு இப்­போது கூட்­டம் அதி­கம் காணப்­ப­டு­வ­தில்லை. தோ பாயோ லோரோங் ஒன்று வீவக புளோக் 111ல் இருக்­கும் 'சிங்­கப்­பூர் பூல்ஸ்' பந்­த­யப் பிடிப்­புக் கூடம், தோ பாயோ பேருந்து நிறுத்­தம் ஆகி­யவை தற்­போது இங்­குள்ள கொவிட்-19 கிரு­மித்­தொற்று குழு­மங்­களில் சில. பேருந்து நிறுத்­தத்­தில் குறைந்­தது 254 கொவிட்-19 சம்­ப­வங்­கள் உள்­ளன. அது­தான் இந்­தப் பேட்­டை­யின் ஆகப் பெரிய குழு­மம்.

தோ பாயோ லோரோங் எட்­டில் உள்ள ஈரச் சந்தை, உண­வங்­காடி, லோரோங் ஏழில் உள்ள இரவு நேரக் காய்­கறி ஒட்­டு­மொத்த விற்­ப­னைச் சந்தை, தோ பாயோ நார்த்தில் இருக்­கும் இஸ்­லா­மிய சம­யப் பள்ளி­யான 'இர்­ஷாத் சுஹ்ரி அல்-இஸ்­லா­மியா', தோ பாயோ சென்ட்­ர­லில் உள்ள 'ஓரி­யன்ட் கோல்ட்ஸ்­மித்ஸ் ஆண்ட் ஜுவல்­லர்ஸ்' நகைக்­கடை ஆகி­யவை இதர கொவிட்-19 தொற்றுக் குழு­மங்­கள்.

பொது­வாக கூட்­டம் அதி­கம் கூடும் லோரோங் எட்டு உண­வங்­காடி நேற்று முன்­தி­னம் ஆள் நட­மாட்­ட­மின்றி காணப்­பட்­டது. அங்­குள்ள 80 கடை­களில் கால் பங்­கிற்­கும் குறை­வா­ன­வையே திறந்­தி­ருந்­தன.

சுத்­தி­க­ரிப்­புப் பணி­க­ளுக்­குப் பிறகு சந்­தை­யும் உண­வங்­கா­டி­யும் மீண்­டும் திறக்­கப்­பட்­டுள்­ளன. ஆனால் சில கடை­க்­கா­ரர்­கள் தங்­க­ளின் கடை­க­ளைத் திறப்பதை ஒத்­தி­வைத்­துள்­ள­னர். வாடிக்­கை­யா­ளர்­கள் அதி­கம் வர­மாட்­டார்­கள் எனக் கருதியதால் பல கடைக்­கா­ரர்­கள் கடை­களை இன்­னும் திறக்­க­வில்லை என்று அங்­குள்ள வர்த்­த­கர்­கள் சிலர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறி­னர். தோ பாயோ பேருந்து நிறுத்­தத்­தில் பொது­வாக மதிய உணவு உண்ண வரு­வோ­ரின் எண்­ணிக்கை கணி­ச­மா­கக் குறைந்­துள்ளது. வார இறுதி நாட்­களில் வர்த்­த­கம் சற்று மேம்­பட்­டி­ருக்­கும், ஆனால் குழு­மம் அறி­விக்­கப்­ப­டுவதற்கு முன்­பி­ருந்­த­தைப் போல் நிலைமை இல்லை என்று அங்குள்ள வர்த்­த­கர்­கள் சிலர் வருத்­தம் தெரி­வித்­த­னர். பேருந்து நிறுத்­தக் குழு­மத்­தால் பேருந்துச் சேவை­கள் சில­வற்­றில் தாம­தம் ஏற்­பட்­டுள்­ளது.

சில பேருந்­துச் சேவை­க­ளுக்குக் காத்­தி­ருக்­க­வேண்­டிய நேரம் சுமார் ஐந்து நிமி­டங்­கள் அதி­க­ரித்­துள்­ள­தா­கப் பய­ணி­கள் தெரி­வித்­த­னர்.

சில­ரின் அலட்­சி­யப் போக்­கால் நிலைமை இவ்­வ­ளவு மோச­ம­டைந்­தி­ருப்­ப­தாக சில குடி­யி­ருப்­பா­ளர்­கள் கூறி­னர். கொவிட்-19 குழு­மங்­கள் தின­மும் உரு­வெ­டுத்­துக் கொண்­டு­தான் இருக்­கும் என்­றும் அதற்­கா­கப் பயத்­தி­லேயே வாழ முடி­யாது என்று வேறு சில குடி­யி­ருப்­பா­ளர்­கள் கூறி­னர்.