பெரும்பாலான முதலாளிகளிடம் அனைவரையும் உள்ளடக்கும் வேலையிடக் கொள்கைகள் இல்லை

பெரும்பாலான முதலாளிகளிடம் அனைவரையும் உள்ளடக்கும் வேலையிடக் கொள்கைகள் இல்லை

2 mins read
fac57f7b-e3cd-4124-bbed-397866b35790
-

சிங்­கப்­பூ­ரில் பெரும்­பா­லான முத­லா­ளி­கள் பன்­முக, சமத்­துவ அடிப்­

ப­டை­யி­லான, அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கும் கொள்­கை­க­ளால் கிடைக்­கக்­கூ­டிய பலன்­களை அறிந்­துள்­ள­னர்.

ஆனால், அவர்­களில் 10ல் 7 முத­லா­ளி­கள் இது தொடர்­பான கொள்­கை­களை இன்­ன­மும் அமல்­

ப­டுத்­த­வில்லை என்று சிங்­கப்­பூர் தேசிய முத­லா­ளி­கள் கூட்­ட­மைப்பு மேற்­கொண்ட ஆய்வு ஒன்று தெரி­விக்­கிறது.

இந்த ஆய்வு 19 துறை

­க­ளைச் சேர்ந்த 186 முத­லா­ளி­க­டம் மேற்­கொள்­ளப்­பட்­டது.

இதில் 71 விழுக்­காடு முத­லா­ளி­கள் மேற்­கு­றிப்­பிட்ட பன்­முக, சமத்­துவ அடிப்­ப­டை­யி­லான, அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கும் கொள்­கை­கள் நிறு­வன கலா­சா­ரத்­தில் ஆக்­க­பூர்­வ­மான தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் என்­பதை ஏற்­றுக்­கொள்­கின்­ற­னர். அத்­து­டன், 55 விழுக்­காடு முத­லா­ளி­கள் ஊழி­யர் ஈடு­பாட்­டில் இது­போன்ற கொள்­கை­கள் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வதை ஏற்­றுக்­கொள்­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், 10ல் ஆறு முத­லா­ளி­கள் பணி­ய­மர்த்­தல், பதவி உயர்வு போன்­ற­வற்­றில் இந்­தக் கொள்­கை­களை அமல்­ப­டுத்தத் தொடங்­கி­யுள்­ள­தாக ஆய்வு கூறு­கிறது. எனி­னும், ஆண்­கள், பெண்­கள் இடையே நில­வும் ஊதிய ஏற்­றத்­தாழ்வு, வாழ்க்­கைத் தொழில் முன்­னேற்­றம், வயது அடிப்­ப­டை­யி­லான செயல்­தி­றன், உடற்­கு­றை­யுள்­ளோர் அல்­லது பரா­ம­ரிப்பு தேவைப்­ப­டு­வோர் எதிர்­கொள்­ளும் தடை­கள் போன்­றவை குறித்து போது­மான தர­வு­கள் இல்­லா­ததைச் சுட்­டி­ய­தாக ஆய்வு கோடிகாட்­டி­யது.

வேறு பல நிறு­வ­னங்­கள், தங்­க­ளது நிறு­வன பண்புநெறி­கள், ஊழி­யர் நிர்­வா­கம், ஊழி­யர் செயல்­பாடு போன்­ற­வற்­றால் இந்­தக் கொள்­கை­களை அமல்­ப­டுத்த முடி­யாத நிலை இருப்­ப­தா­கக் கூறின.

அத்­து­டன், சில நேரங்­களில் உற்பத்திப் பிரிவு ஊழியர் மேலா­ளர்­க­ளால் தங்­கள் ஊழி­யர்­களை பாகு­பாடு காட்­டா­மல் நடத்த இய­லா­த­தை­யும் இந்த நிறு­வ­னங்­கள் சுட்­டிக் காட்­டி­ய­தாக ஆய்வு கூறு­கிறது. தற்­போ­தைய நிலை­யில் அனைத்­து­லக மாதர் தின கொண்­டாட்­டங்­கள் அவ்­வ­ளவு பல­ன­ளிக்­கக்­கூ­டி­ய­தாக இல்லை என்று ஆய்வு தெரி­விக்­கிறது.

அதற்­குக் கார­ணம், மேற்­கூ­றிய அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கும் கொள்­கை­களைப் பெரும்­பா­லான நிறு­வ­னங்­கள் இன்­னும் அமல் செய்­யா­த­து­டன் தங்­கள் ஊழி­யர்­க­ளு­டன் நீண்­ட­கால அடிப்­ப­டை­யில் ஈடு­பாடு கொள்­ளா­ததே என்று ஆய்­வில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.