தமக்குச் சம்பந்தமில்லாத கொலை வழக்கில் பங்கேற்க கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் போலிஸ் அதிகாரி இஸ்கந்தர் ரஹ்மாட் தாக்கல் செய்த மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
2017ஆம் ஆண்டில் உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் உள்ள வீட்டில் கர்ப்பமாக இருந்த தமது மனைவியையும் தமது நான்கு வயது மகளையும் கழுத்தை நெரித்துக் கொன்ற குற்றத்துக்காக 46 வயது டியோ கிம் ஹெங்கிற்குக் கடந்த ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது.
தீர்ப்பை எதிர்த்து டியோ மேல்முறையீடு செய்துள்ளார்.
இதில் பங்கெடுத்து அரசியல் சாசனப் பிரிவுகளின்கீழ் உள்ள கொலைக் குற்றம் தொடர்பான இரண்டு சட்டக் கூறுகளை எதிர்க்கும் டியோவுக்கு ஆதரவு வழங்க இஸ்கந்தர் விருப்பம் தெரிவித்தார்.
இஸ்கந்தரின் விண்ணப்பத்தை மேல்முறையீட்டு நிதிமன்றம் நிரா
கரித்துள்ளது.
2013ஆம் ஆண்டில் தந்தை, மகன் இருவரைக் கொலை செய்த குற்றத்துக்காக இஸ்கந்தருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

