அரசாங்கச் சொத்துகளைச் சேதப்படுத்துமாறு சமூக ஊடகப் பதிவுகளில் விடுக்கப்பட்ட சவாலைப் பற்றி தாங்கள் அறிந்திருப்பதாக போலிசார் தெரிவித்துள்ளனர். 'devious licks' என்ற அச்சவாலின்படி, பள்ளிச் சொத்துகளை மாணவர்கள் சேதப்படுத்திவிட்டு தாங்கள் செய்ததை சமூக ஊடகத்தில் பதிவிட வேண்டும்.
ஆனால், அச்சவால் தொடர்பிலான இரு வேறு சம்பவங்களில் அரசாங்கச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் நில ஆணையம், தேசிய சுற்றுப்புற வாரியம் ஆகியவற்றுக்குச் சொந்தமான பெயர்ப் பலகைகளை அகற்றியதன் தொடர்பில் இரண்டு இளையர்கள் மீது போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அனுமதியின்றி அரசாங்க சொத்துகளை அகற்றுவது குற்றமாகும். அத்துடன் குற்றச் செயலுக்கு இட்டுச்செல்லும் இதுபோன்ற சமூக ஊடகச் சவால்களில் அங்கம் வகிக்க வேண்டாம் என்று போலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.

