நோய்த்தொற்றால் ஏற்பட்ட குழப்பம், விரக்தி

நோய்த்தொற்றால் ஏற்பட்ட குழப்பம், விரக்தி

1 mins read
2fb36da9-1202-427f-a2d4-cffc06b727db
-

அண்­மை­யில் அதி­க­ரித்­துள்ள கொவிட்-19 சம்­ப­வங்­க­ளைச் சமா­ளிக்க சிங்­கப்­பூ­ரின் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புப் பிரிவு போரா­டிக்­கொண்­டி­ருக்­கிறது. இன்­னொரு பக்­கம் பொது மக்­க­ளி­டையே எரிச்­ச­லும் குழப்­ப­மும் அதி­க­ரித்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

சிலர் நோய்த்­தொற்­று குறித்து தத்­தம் சூழ­லுக்கு ஏற்ப அதி­கா­ர­பூர்வ ஆலோ­ச­னை­யைப் பெற சுகா­தார அமைச்­சு­டன் தொடர்­பு­கொள்ள இய­ல­வில்லை என குறை கூறி­யுள்­ள­னர். மேலும் சிலர் நோய்த்­தொற்று உறு­தி­செய்­யப்­பட்­டும், தங்­க­ளைக் குண­ம­டை­யும் விடு­திக்கு அழைத்­துச் செல்ல அதிக நேர­மா­கிறது என்று குறை கூறி­யுள்­ள­னர். ஆகவே, தக­வல்­க­ளை­யும் அனு­ப­வங்­க­ளை­யும் ஒருங்­கி­ணைத்து பகிர்ந்­து­கொள்ள 'டெலி­கி­ராம்' செய­லி­யில் 'எஸ்ஜி குவா­ரன்­டீன் ஆர்­டர் சப்­போர்ட் குருப்' என்ற குழு ஒன்று தொடங்­கப்­பட்­டுள்­ளது.

அவர்­க­ளி­டையே சிறார்­க­ளுக்­கும் மூத்­தோ­ருக்­கும் நோய்த்­தொற்று ஏற்­பட்ட சில குடும்ங்­களில் அதிக குழப்­பங்­களும் கவ­லை­களும் நில­வு­வ­தாக அறி­யப்­ப­டு­கிறது. மேலும், சுகா­தார அமைச்­சுக்­குத் தொலை­பேசி மூலம் பலமுறை தொடர்­பு­கொள்ள முயன்­ற­போது தொடர்பு துண்­டிக்­கப்­ப­டு­வது குறித்­தும், பதி­வு­செய்­யப்­பட்ட பதில்­களே கிடைப்­ப­தும் மக்­க­ளி­டையே பெரிய மன வருத்­தம் எழுந்­துள்­ளதும் தெரி­ய­வந்­துள்­ள­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறி­யது.