சட்டப் பணிகளில் தொழில்நுட்பப் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக காலப்போக்கில் வழக்கறிஞர்களின் சேவை தேவையில்லாமல் போய்விடுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தக் கேள்விக்கு நேற்று நிகழ்ந்த வருடாந்திர சட்டத் தொழில்நுட்ப மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய சட்ட பதிலளித்துள்ளார்.
தொழில்நுட்பம் வழக்கறிஞர்கள் அதிக ஆற்றலுடன் செயல்படவும் சிறந்த சேவையை வழங்கவும் உதவுகிறது என அமைச்சர் கூறினார். குறிப்பாகக் கணக்கியலில் அதிகமாக உதவும் என்று அவர் கூறினார்.
ஆனால் 'ஆர்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ்' எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், வழக்கறிஞர்களுக்கு மாற்றாக ஒருபோதும் செயல்பட முடியாது," என்றார் அமைச்சர்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப உதவியுடன் அடிப்படைச் சேவை வழங்க முடிந்தாலும் அதனால் வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட தேவையை வழங்க முடியாது. அத்துடன் வாடிக்கையாளர்களின் வழக்குகளில் சிறந்த அணுகுமுறையையும் வகுக்க முடியாது என்றும் அமைச்சர் விளக்கினார். இவ்வாண்டின் சட்ட, தொழில்நுட்ப மாநாடு 'டெக்லாஃபெஸ்ட்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இத்திட்டம் விரைவில் வழக்கறிஞர்கள் வாடிக்கையாளர்களை மெய்நிகர் மூலம் தொடர்புகொள்ள வழிவகுக்கும். இத்திட்டம் சட்ட தொழில்நுட்பத் தளத்துடன் அடுத்த ஆண்டின் முன் பகுதியில் தொடங்கவிருக்கிறது.

