தோ பாயோ லோரோங் 8 குழுமம் குறித்து ஆய்வு: மக்கள் நெருக்கடியே தொற்று அதிகரிப்புக்குக் காரணம்

தோ பாயோ லோரோங் 8 குழுமம் குறித்து ஆய்வு: மக்கள் நெருக்கடியே தொற்று அதிகரிப்புக்குக் காரணம்

2 mins read
e04bb40f-bacd-4c0f-83db-2052ab0d0e4d
-

மக்­கள் நெருக்­கடி அதி­க­முள்ள தோ பாயோ லோரோங் 8ல் உள்ள ஈரச்சந்தை உண­வங்­காடி, கொவிட்-19 தொற்று எளி­தில் பர­வக்­கூ­டிய இட­மாக இருந்­ததை ஆய்­வா­ளர்­கள் அடை­யா­ளம் கண்­டுள்­ள­னர். தொற்­றுக் குழு­ம­மாக அடை­யா­ளம் காணப்­ப­டு­வ­தற்கு இரண்டு மாதங்­க­ளுக்கு முன்­னரே அப்­ப­குதி தொற்று பர­வும் அபா­யத்­தில் இருந்­தது இந்த ஆய்­வில் தெரி­ய­வந்­துள்­ளது. மூன்று பல்­க­லைக்கழ­கங்­க­ளைச் சேர்ந்த ஆய்­வா­ளர்­கள் இந்த ஆய்வை மேற்­கொண்­ட­னர். அப்­ப­கு­தி­யில் வீட்­டில் இருந்தே தங்­கள் பணி­யிட வேலை­யைச் செய்ய இய­லா­தோர் பலர் உள்­ள­தா­லும் அங்­குள்ள உண­வங்­கா­டி­யில் அதி­க­மா­னோர் கூடு­வ­தா­லும் தொற்று அதி­க­ரிக்­கும் ஆபத்து அவ்­வி­டத்­தில் உள்­ள­தாக ஆய்­வா­ளர்­கள் கூறு­கின்­ற­னர். சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­க­லைக்­க­ழ­கம் (எஸ்­யு­எஸ்­எஸ்), சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கம் (என்­யு­எஸ்), சிங்­கப்­பூர் தொழில்­நுட்ப வடி­வ­மைப்பு பல்­க­லைக்­க­ழ­கம் (எஸ்­யு­டிடி) ஆகி­யவை இணைந்து இந்த ஆய்வை மேற்­கொண்­டன.

இந்த ஆய்­வுக்­குழு­வுக்கு தலைமை தாங்கிய எஸ்யுஎஸ்எஸ்ஸின் இணைப்­பே­ரா­சி­ரி­யர் லியோங் சான்-ஹூங் கூறுகையில், பிரா­டல் சாலை மற்­றும் மத்­திய விரை­வுச்­சாலை - எல்­லை­யில் உள்ள இரண்டு முக்­கிய பாதை­கள் - வாக­னப் பணி­ம­னை­கள், பள்­ளி­கள் மற்­றும் தொழில்­து­றைப் பகு­தி­கள் உள்­ளன, இவை அனைத்­தும் அப்­ப­கு­தி­யில் மக்­கள் நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­யவை என்­றார். அத்­து­டன் அங்கு குடி­யி­ருக்­கும் மக்­க­ளின் அமைப்­பும் கிரு­மிப் பர­வ­லுக்கு ஒரு கார­ணி­யாக உள்­ளது. அத்­து­டன் அங்கு வாழும் பெரும்­பா­லோர் முதி­ய­வர்­கள் அல்­லது அவர்­க­ளால் பணி­யிட வேலையை வீட்­டில் இருந்து செய்ய முடி­யாத நிலை உள்­ளது என்றார் பேரா­சி­ரி­யர். ஏனெ­னில், கிரு­மிப் பர­வல் குறித்து இங்­குள்ள குடி­யி­ருப்­பா­ளர்­கள் வெவ்­வேறு வித­மான கருத்­து­க­ளைக் கொண்­டுள்­ள­னர். அவர்­கள் எப்­போ­தும்­போல் சந்­தைக்­குச் சென்று காய்­க­றி­கள் வாங்­கு­வது அல்­லது வேலைக்­குக் கிளம்­பு­வது போன்ற வழக்­க­மான நட­வடிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். மேலும் அந்­தப் பகு­தி­யில் வசிக்­கும் முதி­ய­வர்­களோ, தாங்­கள் ஏற்­கெ­னவே தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தால் தொற்று தங்­களை அண்­டாது என்று நினைக்­கின்­ற­னர். அப்­ப­கு­தி­யில் தொற்று அபா­யம் உள்­ளது என்­பதை அவர்­கள் உணர்ந்­த­தா­கத் தெரி­ய­வில்லை என்றார். இவ்­வா­றான மன­நி­லை­யைக் கொண்­டுள்ள முதி­ய­வர்­கள், பாது­காப்பு இடை­வெ­ளி­யைக் கடைப்பி­டிப்­பது, சரி­யான முறை­யில் முகக்­க­வ­சம் அணி­வது போன்­ற­வற்­றில் அக்­கறை செலுத்­தா­மல் இருப்­ப­தற்­கும் வாய்ப்­புள்­ள­தாக அவர் கவலை தெரி­வித்­தார்.

தொற்றுக் குழு­மங்­க­ளாக உரு­வெ­டுத்­த­தற்­கான கார­ணங்­க­ளைக் கண்­ட­றி­வ­தற்­காக இந்த ஆய்வு கடந்த ஆண்டு ஜன­வரி முதல் ஜூன் மாதம் வரை மேற்­கொள்­ளப்­பட்­டது. லோரோங் 8ல் உள்ள ஈரச்­சந்தை, உண­வங்­காடி நிலை­யம் ஆகி­ய­வற்­றில் 40க்கு மேற்­பட்ட தொற்­று­ச் சம்பவங்கள் தொடர்­பி­ருந்­தது.