செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
a8d2c5d2-6a48-4d50-9895-5042f1645494
-

அங் மோ கியோ சமூக மருத்­து­வ­மனை ஒன்­றில் வரு­கை­யா­ளர்­க­ளுக்­குத் தடை

அங் மோ கியோ­வில் உள்ள தை ஹுவா குவான் மருத்­து­வ­மனை, வரு­கை­யா­ளர்­க­ளுக்கு அடுத்த மாதம் 21ஆம் தேதி வரை தடை விதித்­துள்­ளது. சமூ­கத்­தொற்று அதி­க­ரிப்­ப­தைத் தொடர்ந்து அந்த சமூக மருத்­து­வ­மனை இந்த நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டுள்­ளது. இருப்­பி­னும் கடு­மை­யான நோயால் பாதிக்­கப்­பட்­டுள்ள நோயா­ளி­கள் அல்­லது பரா­ம­ரிப்­பா­ளர்­க­ளின் உதவி தேவைப்­படும் நோயா­ளி­கள் ஆகி­யோ­ரின் அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளுக்­கும், பரா­ம­ரிப்­பா­ளர்­க­ளுக்­கும் அனு­மதி அளிக்­கப்­ப­டு­வது குறித்து பரி­சீ­லிக்­கப்­படும் என்­றும் அந்த மருத்­து­வ­மனை தெரி­வித்­தது. அவ்­வாறு அனு­ம­திக்­கப்­ப­டு­வோர், கொவிட்-19 தொற்று பாதிப்பு இல்­லை­ என்­ப­தற்­கான ஏஆர்டி சோதனை முடிவு அல்­லது வருகை தரும் நாளுக்கு 24 மணி நேரத்­திற்கு முன்­ன­தாக பிசி­ஆர் சோதனை செய்­து­கொண்­டி­ருக்க வேண்­டும். வரு­கை­யா­ளர்­க­ளுக்­குத் தடை விதிக்­கப்­பட்­டி­ருந்­த­போ­தி­லும், அங்­குள்ள நோயா­ளி­கள் தங்­கள் அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளி­டம் இணை­யம் வழி கலந்­து­ரை­யா­டும் வகை­யில் இணைய வசதி ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக மருத்­து­வ­மனை தெரி­வித்­துள்­ளது.

பாது­காப்பு இடை­வெ­ளி­யைக்

கடைப்­பி­டிக்­காத 19 பேரி­டம் விசா­ரணை

பாது­காப்பு இடை­வெளி கட்­டுப்­பாட்டை மீறி­ய­தற்­காக

19 பேரி­டம் போலிஸ் விசா­ரணை மேற்­கொண்டு வரு­கிறது. அவர்­கள் இந்த மாதம் 20ஆம் தேதி­யன்று உரி­மம் பெறாத மதுக்­கூ­டம் ஒன்­றில் ஒன்­று­கூடி மது­பா­னம் அருந்­திக்­கொண்டு, சிறு­சிறு விளை­யாட்­டு­களில் ஈடு­பட்­ட­னர். இந்­தச் சம்­ப­வம் பாலஸ்­டி­யர் சாலை­யில் வர்த்­தக மற்­றும் குடி­யி­ருப்­புக் கட்­ட­டம் ஒன்­றில் நிகழ்ந்­தது. கொவிட்-19 தொற்­றுச் சம்­ப­வத்­தைக் கட்­டுப்­ப­டுத்­தும் வகை­யில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள பாது­காப்பு இடை­வெ­ளி­யைக் அவர்­கள் கடைப்பிடிக்­கா­மல் ஒன்­று­கூ­ட­லில் ஈடு­பட்­ட­தற்­காக அவர்­க­ளி­டம் போலிஸ் விசா­ரணை மேற்­கொண்டு வரு­கிறது. நேற்று போலிஸ் இது­கு­றித்து ஓர் அறிக்கை வெளி­யிட்­டி­ருந்­தது. அதில், 19 பேர், உரி­மம் பெறாத ஓரி­டத்­தில் ஒன்­று­கூடி மது­பா­னம் அருந்தி கராவோக்கே மற்­றும் மேசைப்­பந்து உள்­ளிட்ட விளை­யாட்­டு­களில் ஈடு­பட்­ட­தா­கக் கூறி­யது. அந்த உரி­மம் பெறாத கேளிக்­கைக்­கூ­டத்தை நடத்­தி­ய­வர் என என்று நம்­பப்­படும் 25 ஆட­வர் ஒரு­வர் அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ளார்.