சிங்கப்பூரின் எட்டு பூங்காக்களில் புதிதாக அமையவுள்ள 360 குட்டித் தோட்டங்கள்

சிங்கப்பூரின் எட்டு பூங்காக்களில் புதிதாக அமையவுள்ள 360 குட்டித் தோட்டங்கள்

2 mins read
137387f8-9243-40e8-8b38-5c3d41ce7c2e
-

தோட்­டக்­கலை ஆர்­வ­லர்­கள் இனி தங்­க­ளின் பசு­மைக் கைவண்­ணத்­தைக் காட்ட மேலும் ஒரு வாய்ப்பு உரு­வா­கி­யுள்­ளது. தீவெங்­கும் உள்ள எட்டு பூங்­காக்­களில் தோட்­டங்­கள் அமைப்­ப­தற்­காக மொத்­தம் 360 புதிய நிலங்­கள் ஒதுக்­கப்­ப­ட­ உள்­ளன.

இவற்­று­டன் சிங்­கப்­பூ­ரில் உள்ள 23 பூங்­காக்­கள் மற்­றும் தோட்­டங்­களில் 2,000க்கும் மேற்­பட்ட தோட்ட நிலங்­கள் அமைந்­தி­டும்.

ஒவ்­வொரு நிலத்­தி­லும் உயர்த்­தப்­பட்ட செடி நடும் பகுதி ஒன்று இருக்­கும். அத்­து­டன் தோட்ட வேலைக்­குத் தேவைப்­படும் உப­கரணங்­களை வைப்­ப­தற்­காக ஒரு சிறிய சேமிப்­புப் பகு­தி­யும் இருக்­கும்.

நிலம் ஒவ்­வொன்­றும் ஆண்­டுக்கு 57 வெள்ளி கட்­ட­ணத்­தில் மூன்­றாண்டு வரை ஒரு­வ­ருக்­குக் குத்­த­கைக்கு விடப்­படும்.

பிடோக் அவென்யூ 3, எங்­கர்­வேல் ஸ்தி­ரீட்­டின் செங்­காங் ரிவர்­சைடு, ஈசூன் அவென்யூ 11, காலாங் ரிவர்­சைடு உட்­பட எட்டு பூங்­காக்­களில் இந்­தப் புதிய குட்­டித் தோட்­டங்­கள் அமைக்­கப்­படும்.

பிடோக் டவுன் பூங்­கா­வில் ஆக அதிக எண்­ணிக்­கை­யில் தோட்­டம் அமைப்­ப­தற்­கான நிலங்­கள் ஒதுக்­கப்­ப­ட­வுள்­ளன. அங்கு 128 நிலங்­கள் இருக்­கும்.

கொள்­ளை­நோய்ச் சூழல், வீட்­டில் இருந்து வேலை செய்­யும் நிலை போன்­ற­வற்­றால் அதிக நேரத்தை வீட்­டில் செல­வி­டும் சிங்­கப்­பூ­ரர்­கள், தோட்ட வேலை­யில் பொழு­து­போக்­காக ஈடு­படும் போக்கு அதி­க­ரித்­து­வ­ரு­வ­தைக் காண முடி­கிறது.

இந்­நி­லை­யில், புதி­தாக அமைக்­கப்­ப­ட­வுள்ள நிலங்­கள், அவர்­க­ளின் ஆர்­வத்தை மேலும் தூண்­டும் வகை­யில் விளங்­கி­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

புதிய நிலங்­க­ளுக்­கான இணைய விண்­ணப்­பங்­களை நாளை காலை 10 மணி முதல் சமர்ப்­பிக்­க­லாம். கணினி வழி­யான குலுக்­கல் முறை­யில் விண்­ணப்ப­தா­ரர்­க­ளுக்கு நிலங்­கள் தரப்­படும். விண்­ணப்­பத்­தைச் சமர்ப்­பிக்க இறுதி நாள் அக்­டோ­பர் 6.

அதை­ய­டுத்து, விண்­ணப்­பம் வெற்­றி­க­ர­மாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டதா என்­பது மூன்று மாதங்­களுக்­குள் விண்ணப்பதாரருக்குத் தெரி­விக்­கப்­படும்.

தங்­கள் வீடு­க­ளுக்கு அருகே உள்ள தோட்ட நிலங்­க­ளுக்கு விண்­ணப்­பிக்­கு­மாறு பொது­மக்­கள் கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­வ­தாக தேசிய பூங்கா கழ­கம் நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் குறிப்­பிட்­டி­ருந்­தது.