முன்னாள் மனைவியைக் கத்தியால் குத்தி கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

முன்னாள் மனைவியைக் கத்தியால் குத்தி கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

2 mins read
98599607-659e-4494-bf01-9da843ee484c
கடந்த 2018ஆம் ஆண்டு கொலையுண்ட போது திருவாட்டி லாவ்வுக்கு வயது 56. படம்:இணையத்தளம் -

தொழில்­நுட்­பக் கல்­விக்­க­ழக (ஐடிஇ) கல்­லூரி சென்ட்­ரல் வளா­கத்­தில் உள்ள கார் நிறுத்­து­மி­டத்­தில் தமது மனை­வி­யைக் கத்­தி­யால் குத்­திக் கொன்ற 69 வயது நப­ருக்கு நேற்று ஆயுள் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

சீட் செர் ஹிங் மீது முன்­ன­தாக குற்­ற­வி­யல் சட்­டம் பிரிவு 300(ஏ)யின் கீழ் கொலைக்­குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டி­ருந்­தது. இப்­பி­ரி­வில் மர­ண­தண்­டனை கட்­டா­ய­மா­கும்.

அவர் இதை எதிர்த்து வாதா­டப் போவ­தில்லை என்று தெரி­வித்­த­பி­றகு, அக்­குற்­றச்­சாட்டு கடந்த மாதம் மாற்­றப்­பட்­டது. மர­ண­தண்­டனை அல்­லது ஆயுள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­படும் பிரிவு 300(சி)யின் கீழ், உயிர் பறிக்­கும் காயங்­கள் விளை­வித்து நோக்­கத்­து­டன் கொலை செய்த குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டது.

சீட்­டுக்கு ஆயுள் தண்­டனை விதிக்­கப்­ப­டு­வதை தாங்­கள் எதிர்க்­க­வில்லை என்று அர­சாங்க வழக்­க­றி­ஞர்­கள் கூறி­னர்.

ஐடி­இ­யில் பணி­செய்து ஓய்­வு­பெற்ற சீட், கொலை நடப்­ப­தற்கு முன் ஏழு ஆண்­டு­க­ளாக தமது முன்­னாள் மனை­வி­யான லாவ் ஹுவீ கியாக்­கி­ட­மி­ருந்து பணம் வேண்­டும் என்று வற்­பு­றுத்தி வந்­தார். விவாக­ரத்­துக்­குப் பிறகு, தமக்­குக் கூடு­தல் சொத்­தும் பண­மும் கிடைத்­தி­ருக்க வேண்­டும் என்று அவர் நம்­பி­ய­தாக உயர் நீதி­மன்­றத்­தில் கூறப்­பட்­டது.

திரு­வாட்டி லாவ் வேறு ஒரு­வ­ரு­டன் தொடர்பு வைத்­தி­ருந்­த­தைக் கண்­டு­பி­டித்­த­தாக அவர் கரு­திய தேதி­க­ளைக் கூட கத்தி ஒன்­றில் அவர் பொறித்து வைத்­தி­ருந்­தார்.

அக்­கத்தி உட்­பட மூன்று கத்­தி­களை எடுத்­துக்­கொண்டு, கடந்த 2018 ஆம் ஆண்டு ஆண்டு ஜூலை 19ஆம் தேதி, அங் மோ கியோ­வில் உள்ள ஐடிஈ கல்­லூரி வளா­கத்­துக்­குச் சென்ற சீட் திரு­வாட்டி லாவ்வை நேருக்கு நேர் எதிர்த்து நின்­றார். திரு­வாட்டி லாவ்­வின் வாக­னத்­துக்­குள் இரு­வ­ருக்­கும் இடையே வாக்­கு­வா­த­மும் கடை­சி­யில் போராட்­ட­மும் ஏற்­பட்­டது.

தப்­பிக்க முயன்ற திரு­வாட்டி லாவ்வை சீட எட்­டு­முறை கத்­தி­யால் குத்­தி­னார். பின்­னர் தமது மார்­புப் பகு­தி­யில் தம்மைத்தாமே 13 முறை குத்­திக்­கொண்டு முன்­னாள் மனை­யி­வின் மீது சாய்ந்­தார்.

'என்­னைச் சாக விடுங்­கள், காப்­பாற்­றா­தீர்­கள்' என்று அவர் வழிப்­போக்­கர்­க­ளி­டம் கூறி­ய­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

திரு­வாட்டி லாவ்­வின் நெஞ்­சுப் பகுதி, நடு முதுகின் இடப்புறம், கீழ் முதுகு ஆகி­ய­வற்­றில் ஏற்­பட்ட மூன்று கத்­திக்­குத்­துக் காயங்­கள் ஒவ்­வொன்­றும் மர­ணத்­துக்கு இட்­டுச்­செல்­லக் கூடி­யவை என்று தடய நோயி­யல் நிபு­ணர் நீதி­மன்­றத்­தில் கூறி­னார்.

கடந்த 1993ஆம் ஆண்டு திரு­ ம­ணம் செய்த சீட்­டும் திரு­வாட்டி லாவ்­வும் 2011ஆம் விவா­க­ரத்து செய்­த­னர். அவர்­க­ளுக்கு ஒரு மகள் உண்டு. திரு­வாட்டி லாவ் ஐடிஇ கல்­லூரி சென்ட்­ர­லில் தேர்­வுப் பிரிவு இயக்­கு­ந­ரா­கப் பணி­யாற்றி வந்­தார்.