தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மனைவியைத் தீயிட்டுக் கொல்ல முயன்றதாக கணவர் ஒப்புக்கொண்டார்

2 mins read
80607d61-f60b-4745-b370-c9657dd29f5b
-

தன்னை­விட்­டுப் பிரிந்து சென்ற மனை­வியை சமா­தா­னத்­துக்குப் பல­முறை அழைத்­தும் வரா­த­தால் அவ­ரைக் கடத்­திச்­சென்று பெட்­ரோல் ஊற்றி எரித்­து­வி­டு­வ­தாக கண­வர் மிரட்­டி­யி­ருக்­கி­றார். தன்­னை­யும் மாய்த்­துக் கொள்­வ­தாக அவர் அச்­சு­றுத்­தி­யுள்­ளார்.

தற்­போது 40 வய­தா­கும் முரு­கன் நண்டோ, "எனக்­குக் கிடைக்­காத மனை­வியை வேறு யாருக்­கும் கிடைக்­க­விட மாட்­டேன்," என்று நண்­ப­ரி­டம் கூறி­யி­ருக்­கி­றார்.

2019 ஜூலை 2ஆம் தேதி 11.00 மணி­ய­ள­வில் துவாஸ் சோத­னைச் சாவ­டி­யைக் கடந்து செல்ல முயன்­ற­போது போலி­சார் அவரைக் கைது செய்­த­னர். கடத்­தப்­பட்ட அவ­ரது மனை­வி­யான 40 வயது கிருஷ்­ண­வேணி சுப்­ர­ம­ணி­யத்­தை­யும் போலி­சார் மீட்­ட­னர்.

அந்­தச் சம­யத்­தில் மலே­சிய தம்­ப­தி­யர் ஜோகூ­ருக்­குத் திரும்பிக் கொண்­டி­ருந்­த­னர்.

திரு­மதி கிருஷ்­ண­வே­ணி­யின் உற­வி­னர் ஒரு­வர் முன்­கூட்­டியே கண­வ­ரின் திட்­டத்தை போலி­சுக்­குத் தெரி­வித்­தி­ருந்­தார்.

சிங்­கப்­பூர் மாவட்ட நீதி­மன்­றத்­தில் நேற்று முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்ட முரு­கன் தன்மீது சுமத்­தப்­பட்ட கடத்­தல், மிரட்­டல் உள்­ளிட்ட குற்­றச்­சாட்­டு­களை ஒப்­புக்கொண்­டார்.

2007இல் திரு­ம­ணம் புரிந்த அவர்கள் ஜொகூர் பாரு­வில் வசித்து வந்­த­னர். ஆனால் திரு­மண வாழ்க்கை கசந்­தது.

முரு­கன் தனது மனை­வியை அடித்­துத் துன்­பு­றுத்­தி­னார் என்று போலிஸ் விசா­ர­ணை­யில் தெரிய வந்­தது.

சூதாட்­டப் பழக்­கத்­தால் அவர் கட­னாளி ஆனார்.

கடந்த 2019இல் தமது பிரச்­சி­னை­கள் பற்­றி­யும் தாம் தனி­மை­யில் இருந்­த­தை­ப் பற்றியும் தோழி­யி­டம் கூறி­னார் கிருஷ்­ண­வேணி.

அவர் மூலம் புதிய நண்­பர் ஒரு­வ­ரின் அறி­மு­கம் கிடைத்­தது. இரு­வ­ரும் தொலை­பேசி வழி­யாக மட்­டும் பேசி வந்­த­னர்.

மனை­வி­யின் தொலை­பே­சி­யில் குறுஞ்­செய்­தி­க­ளைக் கண்ட முரு­கன், தமது மனைவி­யி­டம் இதைப் பற்றிக் கேள்வி எழுப்ப, திரு­மதி கிருஷ்­ண­வேணி தாம் அத்­த­கைய கள்­ளத் தொடர்பு வைத்­தி­ருக்­க­வில்லை என்­றார்.

ஜொகூர் பாருவில் உள்ள தமது தாயாரின் வீட்டுக்கு மாறியதுடன், விவாகரத்து பெற கிருஷ்ணவேணி விண்ணப்பம் செய்தார்.