துவாஸ் வெடிப்பு: நிறுவன இயக்குனர் இன்று நீதிமன்றத்தில் சாட்சியம் அளிப்பார்

துவாஸ் வெடிப்பு: நிறுவன இயக்குனர் இன்று நீதிமன்றத்தில் சாட்சியம் அளிப்பார்

2 mins read
41349017-52f8-455e-a7e7-5d4de642453e
-

கடந்த பிப்­ர­வரி மாதம் துவாஸ் தொழிற்­சா­லை­யில் ஏற்­பட்ட வெடிப்­புச் சம்­ப­வம் பற்றி நடந்­து­வ­ரும் விசா­ர­ணை­யில், மாண்ட ஊழி­யர்­கள் பணி­யாற்­றிய நிறு­வ­னத்­தின் இயக்­கு­நர் இன்று சாட்சி அளிப்­பார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

திரு சுவா சிங் டா, ஸ்டார்ஸ் என்­ஜி­னி­ய­ரிங் நிறு­வ­னத்­தின் ஒரே இயக்­கு­ந­ரும் பங்­கு­தா­ர­ரும் ஆவார். துவாஸ் வளா­கத்­தில் உற்­பத்­திக்கு அவர்தான் ஒட்­டு­மொத்தப் பொறுப்­பா­ள­ராக இருந்­தார்.

கடந்த பிப்­ர­வரி 24ஆம் தேதி காலை 11 மணிக்கு, 32ஈ துவாஸ் அவன்யூ 11இல் உள்ள கட்­ட­டத்­தின் முதல் மாடி­யில் இருந்த பட்­ட­றை­யில் வெடிப்பு நிகழ்ந்­தது.

அந்­நே­ரத்­தில் ஸ்டார்ஸ் என்­ஜி­னி­ய­ரிங் நிறு­வ­னத்­தின் எட்டு ஊழி­யர்­கள் அந்த இடத்­தில் இருந்­த­னர்.

திரு சுப்­பை­யன் மாரி­முத்து, 38, திரு ஷொஹெல் முக­மது, 23, திரு அனி­சு­ஸ­மான் முக­மது, 29 ஆகிய மூன்று பேர் அதில் மாண்­ட­னர். உட­ல் எங்­கும் 90% தீக்­கா­யங்­கள் ஏற்­படு, மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்ட சிறிது நேரத்­தில் சிகிச்சை பல­னின்றி அவர்­கள் மூவ­ரும் உயி­ரி­ழந்­த­னர்.

கடந்த திங்­கட்­கி­ழமை முதல் நேற்றுவரை நடை­பெற்ற பொது விசா­ர­ணை­யில் வெடிப்­புக்கு முன்­னர் நடந்த சம்­ப­வங்­கள் பற்றி ஆரா­யப்­பட்­டது. குறிப்­பாக, தீப் பாது­காப்­பில் பயன்­படும் மூலப்­பொ­ருட்­ க­ளைச் செய்யப் பயன்­ப­டுத்­தப்­பட்ட கலவை இயந்­தி­ரம் பற்றிப் பல கேள்­வி­கள் எழுந்­தன.

நேற்று ஸ்டார்ஸ் என்­ஜி­னி­ய­ரிங் நிறு­வ­னத்­தைச் சேர்ந்த திட்ட நிர்­வாகி பாண்டி முரு­கா­னந்­த­மும் பற்ற வைப்பு தொழி­லா­ள­ரா­கப் பணி­யாற்­றிய திரு முல்லா முக­மது நாசி­மும் சாட்­சி­யம் அளித்­த­னர்.

திரு சுவா­வின் உத்­த­ர­வின்­படி இயந்­தி­ரத்­தில் அவர் மேற்­கொண்ட பற்ற வைப்­பில் 500 வெடிப்­பு­களும் இடை­வெ­ளி­களும் இருந்­த­தா­கக் கூறப்­பட்­டது. ஆனால் தாம் அத­னைச் சரி­யா­கச் செய்­த­தாக நினைத்­த­தாக திரு முல்லா முக­மது கூறி­னார்.

திரு முருகானந்தம், துவாஸ் பட்டறையின் செயல்பாடுகளுக்குத் தாம் பொறுப்பு வகிக்கவில்லை என்றும் ஊழியர்களின் எண்ணிக்கை தமது பொறுப்பு என்றும் கூறினார்.

திரு சுவாவும் பொது நிர்வாகி யாகப் பணியாற்றிய அவரது சகோ தரருமான திரு டெஸ்மண்ட் சுவா வும் தமது மேலதிகாரிகள் என்றார் திரு முருகானந்தம்.