திரு இல்யா ஹைதர் ஸுல்கெல்பிக்கு 14 வயதிருந்தபோது தமது கழுத்தில் ஒரு கட்டி வளர்வதை அறிந்தார்.
அது மூன்றாம் கட்ட புற்றுநோய் என்பது தெரியவந்தது. அதையடுத்து ஒரு மாதத்திற்கும் மேலாக அவர் தீவிர கீமோதெரபி, ரேடியோதெரபி சிகிச்சைகளைப் பெற்றார்.
உயர்நிலை இரண்டாம் வகுப்பு மாணவராக இருந்த திரு இல்யாவுக்கு முழுமையாக குணமடைய மூன்று மாதங்கள் ஆகின.
ஆயினும், தாம் நோய்வாய்ப்பட்டிருந்தபோது சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் தம்மைப் கவனித்துக்கொண்ட விதம், திரு இல்யாவின் மனத்தில் பசுமரத்தாணிபோல் பதிந்தது.
இதன் விளைவாகச் சுகாதாரப் பராமரிப்புப் பணிகள் மன உளைச்சல் ஏற்படுத்தினாலும் அதிலிருந்து மிகுந்த மனநிறைவைப் பெறலாம் என்பதை இல்யா புரிந்துகொண்டார்.
இதற்கு முன்பு உணவு விநியோகம், படப்பிடிப்பு ஆகிய துறைகளில் பணியாற்றிய இல்யா, தமது வாழ்க்கைத்தொழில் மாற்றத்தைத் தமது தாயார் ஊக்குவித்ததாகக் கூறினார். மேலும், தாம் கற்றுக்கொள்வதைத் தமது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தம்மால் கற்றுக்கொடுக்க முடியும் என்றும் தமது தாயாருக்கு வயதாகும்போது அவருக்கு ஏதுவான முறையில் அவரை எவ்வாறு பராமரிக்கலாம் என்பதை தாம் கற்றுக்கொள்ள விரும்புவதாகவும் அவர் கூறினார்.
30 வயதாகிய இல்யா 'ரென் சி' மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் தனது பணியைத் தொடங்கினார்.
ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு சென்ற ஆண்டு வேலை மறுவடிவமைப்புத் திட்டத்தைத் தொடங்கியது.
அத்திட்டத்தின் கீழ் நடுத்தர வயது வாழ்க்கைத் தொழில் மாற்றம் செய்து சமூகப் பராமரிப்புத் துறையில் பணியை ஏற்றுக்கொண்டவர்களில் திரு இல்யாவும் ஒருவர்.
இத்திட்டத்தின் வெற்றியை அடுத்து, மேலும் பல சமூக பராமரிப்பு அமைப்புகள் இத்திட்டத்தில் சேர்ந்துகொள்ள அழைக்கப்படும் என சுகாதார, மனிதவள , நேற்று மெய்நிகர் வாயி லாக நிகழ்ந்த சுகாதார பராமரிப்பு மனிதவள வளர்ச்சி விருது நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

