அமெரிக்காவில் சிங்கப்பூர் ராணுவப் பயிற்சி

அமெரிக்காவில் சிங்கப்பூர் ராணுவப் பயிற்சி

2 mins read
9dbe0342-eeab-4b6b-bda6-a925ca2a70c0
-
multi-img1 of 2

சிங்­கப்­பூர் ஆயு­தப் படை மேற்­கொண்­டு­வ­ரும் ஆகச் சிக்­க­லான, உயர்­தர வெளி­நாட்­டுப் பயிற்­சி­களில் ஒன்­றான 'எக்­சர்­சைஸ் ஃபோர்ஜிங் சேபர்' தற்­போது அமெ­ரிக்­கா­வில் நடை­பெற்­றுக்­கொண்டு இருக்­கிறது.

ஈராண்­டு­களுக்கு ஒரு முறை நடை­பெ­றும் உண்மையான குண்டு­களைக் கொண்டு நடத்­தப்­படும் இந்தத் துப்­பாக்­கிச் சூட்­டுப் பயிற்சி அமெ­ரிக்­கா­வின் இடாஹோ மாநி­லத்­தில் உள்ள மௌன்­டன் ஹோம் ஆகா­யப் படைத் தளத்­தில் நடந்து வரு­கிறது.

பயிற்­சி­யில் பல்­வேறு புதிய ராணுவ தள­வா­டங்­களும் தள­பத்­தி­ய­மும் இடம்­பெற்­றுள்­ளன. 2005ஆம் ஆண்­டில் தொடங்­கப்­பட்ட இப்­ப­யிற்சி தற்­போது எட்­டா­வது முறை­யாக நடை­பெ­று­கிறது. சிங்­கப்­பூர் குடியரசு ஆகா­யப் படை­யைச் சேர்ந்த 600 வீரர்­களும் சிங்­கப்­பூர் ராணு­வத்­தைச் சேர்ந்த 200 வீரர்­களும் இதில் பங்­கேற்­கின்­ற­னர்.

கொவிட்-19 கொள்ளை நோய்ப் பர­வல் சூழல் எழுந்த பிறகு இதுவே சிங்­கப்­பூர் ஆயு­தப் படை மேற்­கொண்­டி­ருக்­கும் முதல் வெளி­நாட்­டுப் பயிற்சி.

மெளன்­டன் ஹோமில் உள்ள ஆகா­யப் படைப் பயிற்­சிப் பகு­தி­யின் பரப்­ப­ளவு, சிங்­கப்­பூ­ரின் பரப்­ப­ள­வில் 20 மடங்­கிற்­கும் அதி­கம்.

அத­னால் பெரிய அள­வி­லான உண்­மை­யான சூழ­லுக்­குப் பொருந்­தும் வகை­யில் சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­யால் அங்கு பயிற்­சி­களை நடத்­த­மு­டி­யும் எனத் தற்­காப்பு அமைச்சு கூறி­யது.

இதன் மூலம் சிங்­கப்­பூர் தற்­காப்பை உயர் தயார் நிலை­யில் வைத்­தி­ருக்­க­மு­டி­யும் என்று அமைச்சு குறிப்­பிட்­டது.

இம்மாதம் 14ஆம் தேதியன்று தொடங்கிய பயிற்சி நாளை நிறைவடையும்.

செயற்கை நுண்ணறிவு

பயிற்­சி­யில் செயற்கை நுண்­ண­றிவு, 'டேட்டா என­லிட்­டிக்ஸ்' எனப்­படும் தரவு ஆய்வு முறை அம்­சங்­களும் இடம்­பெற்­றுள்­ளன.

மாறி­வ­ரும் சூழல்­க­ளுக்­கேற்ப வீரர்­க­ளுக்கு தீர்­வு­களை வழங்­கும் புதிய மென்­பொ­ருள் முறை இவ்­வாண்டு அறி­மு­கம் கண்­டுள்­ளது. இது, சுட­வேண்­டிய குறி­க­ளுக்கு எத்­த­கைய ஆயு­தங்­க­ளைப் பயன்­படுத்­த­வேண்­டும் போன்ற ஆலோ­ச­னை­களை வீரர்­க­ளுக்கு வழங்­கும். இந்த மேம்­ப­டுத்­தப்­பட்ட 'சிசி­ஐ­எஸ்' எனப்­படும் ஆணை, தக­வல் முறை 'எக்­சர்­சைஸ் ஃபோர்ஜிங் சேபர்' பயிற்­சி­யில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கிறது.

தெளி­வான முடி­வு­களை வேக­மாக எடுக்க தள­ப­தி­க­ளுக்கு உதவு­வது முறை­யைப் பயன்­ப­டுத்­து­வதன் நோக்­கம் என்று சிங்­கப்­பூர் குடியரசு ஆகா­யப் படை கூறி­யது.

இந்த முறையை சூழ­லுக்­கேற்ப மாற்­றி­ய­மைக்­க­மு­டி­யும் என்­றும் இது வருங்­கா­லத்­திற்கு உகந்த ஒன்று என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.