வேலை உருவாக்கத்துக்கான ஊக்குவிப்புத் திட்டம் நீட்டிப்பு

வேலை உருவாக்கத்துக்கான ஊக்குவிப்புத் திட்டம் நீட்டிப்பு

3 mins read
b8d9fe6c-36b4-40d0-bc6b-96b674dc900d
வேலை உரு­வாக்­கத்­துக்­கான ஊக்­கு­விப்­புத் திட்­டம் கடந்த ஆண்டு செப்­டம்­பரில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரில் உள்ள நிறு­வ­னங்­கள் இன்­னும் அதி­க­மான உள்­ளூர் ஊழி­யர்­களை வேலைக்கு அமர்த்த ஊக்­கு­விக்­கும் அர­சாங்­கத்­தின் வேலை உரு­வாக்­கத்­துக்­கான ஊக்­கு­விப்­புத் திட்­டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை இன்­னும் ஆறு மாதங்­களுக்கு நீட்­டிக்­கப்­ப­டு­கிறது என்று மனி­த­வள அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

இத்­திட்­டத்­தின் மூலம் உள்­ளூர் ஊழி­யர்­க­ளைப் பணி­ய­மர்த்­தும் நிறு­வ­னங்­கள் தங்­கள் ஊழி­யர்­களுக்கு கொடுக்­கும் ஊதி­யத்­தின் ஒரு பகு­தியை அர­சாங்­கம் வழங்­கும்.

வேலை உரு­வாக்­கத்­துக்­கான ஊக்­கு­விப்­புத் திட்­டம் மூலம் இவ்­வாண்டு மே மாதம் வரை­யி­லான தக­வல்­படி, 58,000 நிறு­வ­னங்­கள் 400,000 உள்­ளூர் ஊழி­யர்­களை வேலைக்கு அமர்த்­தி­யுள்­ளன.

இந்த கொவிட்-19 பெருந்­தொற்று காலத்­தில் அதி­க­மான உள்­ளூர் ஊழி­யர்­களை நிறு­வ­னங்­கள் வேலைக்கு அமர்த்த ஊக்­கு­விக்­கும் வகை­யில் வேலை உரு­வாக்­கத்­துக்­கான ஊக்­கு­விப்­புத் திட்­டம் கடந்த ஆண்டு செப்­டம்­பர் மாதம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

அது இம்­மா­தம் வரை நீடிக்கும் என முன்­ன­ர் அறி­விக்­கப்­பட்­டது. ஆனால், இத்­திட்­டம் மூலம் அர­சாங்­கத்­தின் உதவி பெறு­வ­தற்­கான காலம் அடுத்த மாதம் முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது.

அதே­வே­ளை­யில், நிலைமை மேம்­ப­டும்­போது இத்­திட்­டத்­தின் மூலம் கிடைக்­கப்­பெ­றும் உத­வி­யும் சற்று தளர்த்­தப்­படும்.

தகு­தி­பெ­றும் முத­லா­ளி­கள் அடுத்த மாதத்­தி­லி­ருந்து ஊழி­யர் சம்­ப­ளத்­தின் முதல் $5,000க்கு 15 விழுக்­காடு ஊதிய ஆத­ரவு பெறு­வார்­கள். 40 வய­துக்­குட்­பட்ட உள்­ளூர் ஊழி­யர்­களை முத­லா­ளி­கள் வேலைக்கு அமர்த்­தி­னால், சம்­ப­ளத்­தில் முதல் $4,500க்கு 15 விழுக்­காடு ஊதிய ஆத­ரவு கிடைக்­கும்.

40 வய­துக்கு மேற்­பட்ட முதிர்ச்­சி­ய­டைந்த உள்­ளூர் ஊழி­யர்­கள், உடற்­கு­றை­யுள்­ளோர், முன்­னாள் குற்­ற­வா­ளி­கள் ஆகி­யோரை வேலைக்கு அம­ரத்­தும் முத­லா­ளி­கள் 12 மாதங்­க­ளுக்கு ஊழி­ய­ரின் முதல் $6,000க்கு 50% வரை ஆத­ரவு பெறு­வார்­கள்.

கண் ஒட்­டு­வில்லை உற்­பத்தி செய்­யும் அல்­கான் சிங்­கப்­பூர் நிறு­வ­னத்­துக்கு நேற்று வரு­கை­ய­ளித்­த­போது இது குறித்து பேசிய மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங், "எதிர்­கா­லத்­தில் நிலைமை சரி­ச­ம­மாக இருக்­காது என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. ஆகவே, நிலை­மை­யைச் சரி­செய்­ய­வும் உள்­ளூர் ஊழி­யர்­க­ளின் வேலை தேடும் முயற்­சி­யில் ஆத­ர­வ­ளிக்­க­வும் வேலை உரு­வாக்­கத்­துக்­கான ஊக்­கு­விப்­புத் திட்­டம் இன்­னும் ஆறு மாதங்­களுக்கு நீட்­டிக்­கப்­ப­டு­கிறது.

"இது ஒரு நிரந்­த­ர­மான தீர்வு இல்லை. மாறாக, அசா­தா­ர­ண­மான நட­வ­டிக்கை. அந்த வகை­யில் வர்த்­தக வளர்ச்சி திட்­டங்­க­ளைக் கொண்­டுள்ள முத­லா­ளி­கள் இந்­தத் தகுதி பெறும் காலத்­தில் இன்­னும் அதி­க­மான உள்­ளூர் ஊழி­யர்­களை வேலைக்கு அமர்த்­து­மாறு கேட்­டுக் கொள்­கி­றேன்," என்­றார்.

"உள்­ளூர் ஊழி­யர்­களை வேலைக்கு அமர்த்­தும் இத்­திட்­டத்தை பல துறை­க­ளைச் சேர்ந்த நிறு­வ­னங்­கள் மேற்­கொண்டு வரு­கின்­றன. பத்­தில் நான்கு ஊழி­யர்­கள் வளர்ந்து வரும் துறை­க­ளான கொள்­மு­தல் வர்த்­த­கம், நிபு­ணத்­துவ சேவை­கள், தக­வல், தொடர்­புத் துறை­களில் வேலைக்கு அமர்த்­தப்­பட்­டுள்­ள­னர்.

"இதற்­கி­டையே, மீட்­சி­ய­டைந்­து­வ­ரும் உண­வுச் சேவை­கள் மற்­றும் சில்­லறை விற்­ப­னைத் துறை­களில் பத்­தில் ஓர் ஊழி­ய­ருக்கு வேலை கிடைத்­துள்­ளது.

"தொடர்ந்து மாறி­வ­ரும் சூழ­லில் ஊழி­யர்­களும் வேலை தேடு­வோ­ரும் தொடர்ந்து தங்­கள் திறனை மேம்­ப­டுத்­திக்­கொண்டு, கிடைக்­கும் வேலை வாய்ப்­பு­க­ளைப் பற்­றிக்­கொள்­ளு­மாறு கேட்­டுக்­கொள்­கிறேன். எப்­போ­தும் நம்­பிக்­கை­யு­டன் இருங்­கள். நாம் அனை­வ­ரும் ஒன்­று­சேர்ந்து மேம்­பட்ட பலன்­களைப் பெற தொடர்ந்து முயற்சி மேற்­கொள்­வோம்," என்­றார் டாக்­டர் டான்.