செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
2928160c-514d-46bb-b4e5-3370f1fdd40d
-

வர்த்தகங்களுக்கு $650 மி. ஆதரவு

கடுமையான கொவிட்-19 கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டு உள்ள உணவு, பானக் கடைகள், சில்லறை விற்பனை யாளர்கள் போன்ற வர்த்தகங்களுக்கு சம்பளக் கழிவுகள், வாடகைக் கழிவுகள் மற்றும் இதர வகையான ஆதரவு வழங்குவதற்காக அரசாங்கம் $650 மில்லியனை ஒதுக்கி உள்ளது. எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் அரசாங்கத் துக்குக் கிடைக்கப்பெற்ற வருவாயிலிருந்து இந்தத் தொகை எடுக்கப்படும் என்றும் இதற்காக அரசாங்கத்தின் நிதி இருப்பிலிருந்து தொகை எடுக்கப்படாது என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அடுத்த திங்கட்கிழமையிலிருந்து அக்டோபர் 24ஆம் தேதி வரை கடுமையான பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கை கள் நீடிக்கும். அதன்படி குழுவாக அமர்ந்து உண்ணுதல் ஐந்து நபரிலிருந்து இருவராகக் குறைக்கப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற கொவிட்-19க்கு எதிரான அமைச்சுகள் நிலைப் பணிக் குழுவின் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங், "இந்தக் கட்டுப்பாடுகளால் வர்த்தகங்கள் பாதிக்கப்படும் என்பதை அறிவோம். உணவுண்ணும் நபர் எண்ணிக்கை இரண்டாகக் குறைக்கப்படும்போது, உணவு, பானக் கடைகள், சில்லறை விற்பனையாளர்களுக்கு அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆகவேதான், அரசாங்கம் ஆதரவுக் கரம் நீட்டுகிறது," என்றார்.

ஓங்: கொவிட்-19 ஏற்படுத்தியுள்ள

மூன்று நிச்சயமற்ற சூழ்நிலைகள்

கொவிட்-19 பெருந்தொற்றுடன் வாழவேண்டிய இக்கட்டில் நாம் தள்ளப்பட்டிருந்தாலும், அது ஏற்படுத்தியுள்ள மூன்று நிச்சயமற்ற சூழ்நிலைகளையும் நாம் சந்திக்க வேண்டி உள்ளது. கிருமித்தொற்றின் அன்றாட அதிகரிப்பு, மாண்டோர்் எண்ணிக்கை அதிகரிப்பு, மருத்துவமனைகள் வளங்களின் சுமை அதிகரிப்பு ஆகியவையே அவை என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.

"கிருமித்தொற்றால் மடிவோரின் எண்ணிக்கையைக் குறைக்க அரசாங்கம் எல்லா முயற்சிகளையும் எடுக்கும். அதனால்தான் மக்கள்தொகையில் பெரும்பகுதியினர் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் சிங்கப்பூர் தனது எல்லைகளை மெல்ல திறந்துவிட்டுள்ளது. ஆக, இந்த அலையை நாம் வேறு விதமாக, பாதுகாப்பாக, வெற்றிகர மாக எதிர்கொள்வோம்," என்று திரு ஓங் நேற்று நடை பெற்ற கொவிட்-19க்கு எதிரான அமைச்சுகள் நிலைப் பணிக் குழுவின் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

வருகையாளர் மருத்துவமனை செல்ல நான்கு வாரத் தடை தொடக்கம்

மருத்­து­வ­ம­னை­க்கு வருகை­யா­ளர்­கள் செல்­வ­தற்கு விதிக்­கப்­பட்டுள்ள நான்கு வார காலத் தடை தொடங்கி இருக்­கிறது. கொவிட்-19 தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கத்­தில் இடம்­பெ­றும் அந்­தத் தடையை வரு­கை­யா­ளர்­கள் வர­வேற்று இருக்­கி­றார்­கள். தடை நேற்று தொடங்­கி­யது.

டான் டோக் செங் மருத்­து­வ­மனை­யில் நேற்றுக் காலை ஓரிரு பார்­வை­யா­ளர்களை மட்­டுமே காண முடிந்­தது. அவர்­கள் மருத்­து­வ­மனை­யில் சிகிச்சை பெறும் தங்­கள் அன்­பர்­களைப் பார்க்க அனு­ம­திக்­கப்­பட்ட ஒரு சில­ரில் அடங்­கு­வர்.

அக்­டோ­பர் 23ஆம் தேதி வரை மருத்­து­வ­ம­னை­க­ளுக்கு வருகையா­ளர்­கள் செல்ல தடை விதி­க்­கப்­பட்டுள்ளது. மோச­மா­கப் பாதிக்­கப்­பட்டு இருக்­கும் நோயா­ளி­கள், குழந்தை பிறந்­துள்ள மாதர்­கள் போன்­ற­வர்­களைப் பார்ப்­ப­தற்கு மட்­டும் வருகை­யா­ளர்­கள் அனு­ம­திக்­கப்­ப­டு­வர்.­

தங்­க­ளுக்குத் தொற்று இல்லை என்­பதை தெரி­யப்­ப­டுத்­தும் விரை­வுப் பரி­சோ­த­னைக்கு அவர்­கள் 24 மணி நேரத் திற்குள் உட்­பட்டு இருக்­க­வேண்­டும். வரு­கை­யா­ளர்­க­ளுக்கு அனு­மதி இல்லை என்­பதைத் தெரி­யப்­ப­டுத்­தும் அறி­விப்­பு­கள் டான் டோக் செங் மருத்­து­வ­ம­னை­யில் வைக்­கப்­பட்டிருந்தன.

வாரயிறுதியில் இலவச பரிசோதனை

இன்று முதல் வாரயிறுதி நாட்களில் எட்டு வட்டார பரிசோதனை நிலையங்களிலும் மூன்று விரைவுப் பரிசோதனை நிலையங்களிலும் மூச்சுத்திணறல் அறிகுறி உள்ளவர்கள் இலவசமாக வழங்கப்படும் பிசிஆர் பரிசோதனையைப் பெற்றுக்கொள்ளலாம்.

கூட்ட நெரிசலைத் தவிர்க்க, பரிசோதனைக்கு முன்பதிவு அவசியம். நேற்று மாலை 6 மணிக்குத் தொடங்கிய முன்பதிவு நாளை பிற்பகல் 3 மணி வரை நீடிக்கும் என்று சுகாதார அமைச்சு கூறியது.

அந்த 11 பரிசோதனை நிலையங்கள் யாவை என்ற தகவல் சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் உள்ளது.