'தமிழா' அமைப்பின் 'டைம் போனதே தெரியல' கேலிச் சித்திர புத்தகம் வெளியீடு

'தமிழா' அமைப்பின் 'டைம் போனதே தெரியல' கேலிச் சித்திர புத்தகம் வெளியீடு

1 mins read
9cb08e4c-1ad4-47a5-b756-54d2439fbcd2
-

தமிழ் மொழி­யில் பேச சிர­மப்­படும் 'அன்னா' என்ற ஒரு சிறுமி, 200 ஆண்­டு­க­ளுக்கு முன்பு வாழ்ந்த அழ­கப்­பன் என்ற ஒரு திருக்­குறள் ஆர்­வ­ல­ரைச் சந்­திக்­கி­றாள்.

இவர்­க­ளின் சந்­திப்பு அன்­னா­வின் கண்­ணோட்­டத்­தை­யும் தமிழ் ஆர்­வத்­தை­யும் எப்­படி மாற்­றி­ய­மைக்­கிறது என்­ப­து­தான் 'டைம் போனதே தெரி­யல' என்ற இந்த கேலிச்சித்திர புத்­த­கத்­தின் கதைக் கரு. வித்­தி­யா­ச­மான வரை­ப­டங்­கள் நிறைந்த இந்த கேலிச் சித்திர புத்­த­கத்தை தமிழ் சிறு­வர்­க­ளுக்­கா­கத் தயா­ரித்து வெளி­யி­டு­கிறது 'தமிழா' என்ற இளை­யர் அமைப்பு.

திருக்­கு­றளை மையப்­ப­டுத்தி உரு­வாக்­கப்­பட்ட இந்த கேலிச் சித்திர புத்­த­கம், தமிழ் சிறு­வர்­களி­டையே தமிழ் புத்­த­கங்­கள் வாசிக்­கும் பழக்­கத்தை ஊக்­கு­விப்­ப­தோடு தமிழ்­மொ­ழி­யின் வர­லாற்­றை­யும் முக்­கி­ய­மான முன்­னோ­டி­க­ளை­யும் முன்­னி­றுத்­து­கிறது.

தங்­க­ளைப் போன்ற இளைய தலை­மு­றை­யி­னர் தமி­ழில் ஆர்­வம் இருந்­தும் அம்­மொ­ழி­யில் பேச தயக்­கம் கொள்­கின்­ற­னர், அவர்­களது தயக்­கத்தை அகற்றி தன்­னம்­பிக்­கையை ஊட்ட இந்த கேலிச்சித்திர புத்­த­கம் ஊக்­கு­விக்­கும் என்று நம்­பு­கிறது 'தமிழா'.

ஸூம் வழி மெய்­நி­க­ரில் இன்று பிற்­ப­கல் 2 மணிக்கு நடை­பெ­ற­வி­ருக்­கும் புத்­தக வெளி­யீட்­டில் எழுத்­தா­ளர்­கள் கன­க­லதா, சித்­து­ராஜ் பொன்­ராஜ் ஆகி­யோர் ஒரு கலந்­து­ரை­யா­ட­லில் பங்­கேற்­க­வுள்­ள­னர்.

சிங்­கப்­பூ­ரின் தமிழ் இலக்­கிய சமூ­கத்தை பற்­றிய இளம் எழுத்­தா­ளர்­க­ளின் புரி­தலை அதி­க­ரிக்­க­வும் புத்­தக வெளி­யீ­டு­க­ளின் செயல்­மு­றை­கள் பற்றி அவர்­களுக்­குத் தெரி­யப்­ப­டுத்­த­வும் இந்த நிகழ்வு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்­தப் புத்­தக வெளி­யீட்­டில் பங்­கேற்க விரும்­பு­வோர், இங்கு பதிவு செய்­ய­லாம்: https://linktr.ee/Tamizha