லிட்டில் இந்தியா வட்டாரத்தில் 9 பெண்கள் கைது

லிட்டில் இந்தியா வட்டாரத்தில் செயல்பட்ட உடற்பிடிப்பு நிலையங்களில் ஒன்பது பெண்களை போலிசார் கைது செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் 22க்கும் 47க்கும் இடைப்பட்ட வயதினர்.

மாதர் சாசனத்தின்கீழ் வகைப்படுத்தப்பட்ட குற்றத்தில் இப்பெண்கள் ஈடுபட்டதாக போலிசார் கூறினர். இம்மாதம் 16, 17 தேதிகளில் லிட்டில் இந்தியா வட்டாரத்தில் மூன்று இடங்களில் போலிசார் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து கைது நடவடிக்கை நடைபெற்றது.

இந்த மூன்று நிலையங்களும் உரிமம் பெறாமல் உடற்பிடிப்பு சேவை வழங்கியதாகவும் உடற்பிடிப்பு நிலையங்களுக்கான சட்டத்தை இவை மீறியதாகவும் போலிசார் நேற்று தெரிவித்தனர்.

குற்றங்களை விவரிக்காத போலிசார், விசாரணை நடந்து கொண்டிருப்பதாகக் கூறினர்.

உரிமம் பெறாமல் உடற்பிடிப்பு நிலையங்களை நடத்துவோருக்கு $10,000 வரையிலான அபராதம், ஈராண்டு சிறைத் தண்டனை ஆகியன விதிக்கப்படலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!