$10,000 கள்ள நோட்டு; மூவர் கைது

$10,000 கள்ள நோட்டு ஒன்றைப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட சம்பவம் ஒன்று தொடர்பில் ஆடவர் ஒருவரும் மாதர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளமெண்டி அவென்யூ 3ல் உள்ள வங்கி ஒன்றில் $10,000 கள்ள நோட்டு ஒன்றை ஊழியரிடம் அந்த ஆடவர் வழங்கியது பற்றி புதன்கிழமை தனக்குத் தகவல் கிடைத்ததாக போலிஸ் தெரிவித்துள்ளது.

அந்த நோட்டை வழங்கி, சில்லறை நோட்டுகளைப் பெற்றுக்கொள்ள ஊழியரிடம் அந்த ஆடவர் கோரிக்கை விடுத்தார். அது கள்ள நோட்டு என்பதைக் கண்டறிந்த அந்த ஊழியர், அதுகுறித்து போலிசுக்குத் தெரியப்படுத்தினார்.

வணிக விவகாரத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளால் அந்த 58 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், 33, 37 வயதுடைய அந்த இரு மாதர்களும் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

அந்த $10,000 நோட்டு, ஒரு சிவப்பு பாக்கெட்டு, சிங்கப்பூர் நாணய ஆணையத்தால் வழங்கபட்டதாகக் கூறப்படும் போலி ஆவணம் ஆகியவற்றை போலிஸ் பறிமுதல் செய்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!