முரசொலி
கொவிட்-19 கிருமி, சளிக்காய்ச்சலை ஏற்படுத்தும் கிருமி எல்லாம் தொற்றுநோய்க் கிருமிகள்தான். என்றாலும் சளிக்காய்ச்சல் கிருமியைவிட கொவிட்-19 கிருமி மிகவும் கொலைகாரத்தனமானது என்பதை உலகம் இப்போது கண்டுகொண்டுள்ளது.
உருமாறிய கொரோனா டெல்டா கிருமி திட்டவட்டமானது. வினோதமான பல வழிகளில் வேகமாக அது பரவுகிறது. உலக நாடுகளை நிம்மதி யாக ஓய்வெடுக்கவிடாமல் அது விரட்டுகிறது. பல நாடுகளும் அடிக்கடி தங்கள் உத்திகளை மிக விரைவாக மாற்றிக்கொண்டு தொடர்ந்து செயல்பட வேண்டிய தேவையை அது ஏற்படுத்தி வருகிறது.
கொவிட்-19 தொற்று ஒழியப்போவதில்லை என்ற நிலையில், புதிய ஒரு வழமைக இது ஆகி இருக்கிறது. சிங்கப்பூரும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அந்தக் கிருமி ஏற்படுத்தும் மிரட்டலைச் சமாளிக்கும் வகையில் சிங்கப்பூர் சூழ்நிலைக்கேற்ப பொருத்தமாகச் செயல்பட்டு வருகிறது.
என்றாலும் கடந்த விழக்கிழமை புதிதாக 1,500 பேரை கிருமி தொற்றிவிட்டது. இதே நிலையில் போனால் ஒரு நாளில் 3,200 பேர் பாதிக்கப்படக்கூடிய சூழல் ஏற்படலாம். இதையெல்லாம் கருத்தில்கொண்டுதான் நாள் ஒன்றுக்கு புதிதாக 5,000 பேர் தொற்றுக்கு ஆளானாலும் அத்தகைய ஒரு நிலையைச் சமாளித்து ஆக வேண்டும் என்று பல திட்டங்களை சிங்கப்பூர் மும்முரப்படுத்தி வருகிறது.
அதிவேகமாகப் பரவும் கிருமித்தொற்றைத் தடுத்து நிறுத்திக வேண்டும்; அதே வேளையில் தொற்று காரணமாக சுகாதாரப் பராமரிப்பு முறைக்கு அளவுக்கு அதிக சுமை ஏற்பட்டுவிடாமல் பாது காக்க வேண்டும். கிருமி தொற்றியவர்கள் வீட்டிலேயே தங்கி குணமடைய வேண்டிய ஒரு நிலையை கூடுமானவரை உறுதிப்படுத்தவேண்டிய தேவை ஏற்பட்டு இருக்கிறது. இல்ல பராமரிப்புச் சேவைகளையும் அதிகரிக்க வேண்டி இருக்கிறது.
கொவிட்-19 தொற்று கூடிவரும் சூழலில் மருத்துவமனைகளுக்கும் தீவிர சிகிச்சை பிரிவுகளுக்கும் அளவுக்கு அதிகமான நெருக்கடி ஏற்பட்டுவிடக் கூடிய ஆபத்து இருக்கிறது. ஏற்கெனவே பல மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவுகளில் கூட்டம் அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த ஆபத்தை முன்கூட்டியே தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றால் கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த மும்முரமாக நடவடிக்கை எடுத்தால் மட்டும் போதாது. அவற்றோடு வீட்டிலேயே இருந்து குணமடையும் நடைமுறையும் சமூக சிகிச்சை வசதிகளும் மிக முக்கியமான உத்திகளாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இவற்றை எல்லாம் கருத்தில்கொண்டுதான் இங்கு இப்போது பல வகை நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. மக்கள் இரண்டு இரண்டு பேராக மட்டுமே கூட முடியும். பெரும்பாலான உணவகங்களில் முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே அதுவும் இரண்டு இரண்டு பேராகத்தான் சேர்ந்து சாப்பிட முடியும்.
இருந்தாலும்கூட, உணவங்காடிகள், காப்பிக்கடைகளைப் பொறுத்தவரை, விதிமுறைகளில் மாற்றம் எதுவும் இப்போதைக்கு இருக்காது.
வீட்டிலிருந்து வேலை பார்க்கும் நடைமுறை ஒரு மாத காலத்திற்கு இயல்பான ஒன்றாக இருக்கும்.
மக்கள்தொகையில் ஆக அதிகமானவர்களுக்கு தடுப்பூசியைப் போட்டுவிட்டால் கிருமித்தொற்று முடங்கிவிடும், வழக்கமான நிலை திரும்பிவிடும் என்று மக்கள் எதிர்பார்த்து வந்தனர்.
ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கு மாறாக இப்போது கடுமைன கட்டுப்பாடுகளை அவர்கள் பின்பற்ற வேண்டி உள்ளது. பொருளியலை முற்றிலும் முடக்காமல் தேவைக்கேற்ப துல்லியமான இலக்குடன் கூடிய அணுகுமுறையை அரசு எடுத்து வருகிறது.
எந்த நிலையிலும் நம்முடைய சுகாதாரப் பராமரிப்பு முறை தொடர்ந்து மீள்திறனுடன் கூடியதாகத் திகழ வேண்டும். போதிய வளங்களும் மனித ஆற்றலும் எப்போதும் இருந்து வரவேண்டும்.
இதை உறுதிப்படுத்துவது கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாம் பெரிய வெற்றியைப் பெற அனுகூலமான ஓர் அம்சமாக இருக்கும்.
சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் ஏற்கெனவே அரும்பாடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலவரங்களை எல்லாம் சிங்கப்பூரர்கள் உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும். இதை புரிந்துகொண்டு அவர்கள் செயல்பட வேண்டும்.
கொவிட்-19 தொற்றில் இருந்து மீண்டு வரக்கூடிய ஆற்றல் உள்ள ஒரு நாடாக திகழ வேண்டும் என்று சிங்கப்பூர் விரும்புகிறது.
கல்வி, வணிகம், தொழில், பயணம் முதலான ஒவ்வொன்றையும் நிறைவேற்ற முடிமல் ஒவ்வொரு நாளும் பல்வேறு வாய்ப்புகளை இழந்து வரக்கூடிய ஒரு நாடாகத் திகழ சிங்கப்பூர் விரும்பவில்லை.
கொவிட்-19 தொற்று உச்சத்தை தொட்டு பிறகு படிப்படிக குறையும் என்பதை உலகம் கண்டு வந்து இருக்கிறது.
ஆகையால் இப்போதைய தொற்று சூழலைக் கண்டு அச்சமடைமல் அதைத் துடைத்தொழிக்க உறுதி பூணுவதே மிக முக்கியமானதாக இருக்கும்.
கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் மக்களுக்குப் பல கடமைகள், பொறுப்புகள் உள்ளன. அதுவும் தொற்று தாறுமாறாக அதிகரிக்கும் இந்தக் காலகட்டத்தில் அவர்கள் புதிய கட்டுப்பாடுகளை நிறைவேற்ற முற்றிலும் முயல வேண்டும்.
சமூகக் கலந்துரைடல்களைக் குறைத்துக்கொள்ளவேண்டும். குறிப்பாக முதியவர்களும் எளிதில் கிருமித்தொற்றுக்கு ஆளாகக்கூடிய நிலையில் உள்ளவர்களும் இதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
அடிக்கடி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இப்படி செய்துகொண்டால் தொற்று ருக்கேனும் ஏற்பட்டால் அதை முன்னதாகவே கண்டுபிடித்துவிடலாம்.
தடுப்பூசி செயல்திட்டத்தில் உலகளவில் பெரிய சாதனையை சிங்கப்பூர் நிறைவேற்றி வருகிறது.
முதியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இயக்கமும் சூடுபிடித்து வருகிறது. ஆனாலும் அவற்றை எல்லாம் மீறி உருமாறிய டெல்டா கிருமி வேகமாகப் பரவுவதைப் பார்த்தால் மும்முரமான தடுப்பூசி இயக்கம் மட்டும் போதாது. அதற்கு மேலும் பல்வேறு நடவடிக்கைகளும் கட்டுப்பாடுகளும் அவசர அவசியமாகின்றன. கொவிட்-19 கிருமியுடன் வாழவேண்டும் என்ற ஒரு நிலை ஏற்பட்டுவிட்டால் எப்படி வாழ்வது என்பதைக் கற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழிஇல்லை.
பதற்றம் அடைமல் எல்லாவற்றையும் பொறுமை க மதிப்பிட்டு கொள்கைகளையும் உத்திகளையும் மாற்றிக்கெண்டு, சூழ்நிலைக்கேற்ப மக்களும் புரிந்துணர்வுடன் நடந்துகொண்டால் மிகக் கொடூரமான, கணிக்க இயலாத, உயிர்க்கொல்லி கொவிட்-19 கிருமிக்கு எதிரான போராட்டத்தில் எப்படியும் நாம் வெற்றி பெற்றுவிடலாம் என்பதே நம்பிக்கை.