தொற்று உள்ள, உடல் நலமிக்க ஊழியர் வீட்டில் இருந்தே வேலை பார்க்க வேண்டும்

2 mins read
80b363ab-76b8-470b-8a6c-8015a15918f8
-

கொவிட்-19 விரை­வுப் பரி­சோ­த­னை­யில் தொற்று இருப்­ப­தாக தெரி­ய­வந்­த­வர்­கள் உடல்­நிலை நன்­றாக இருந்­தா­லும் தங்­களைத் தனி­மைப்­படுத்­திக்­கொள்ள வேண்­டும். வீட்டி­லி­ருந்து வேலை பார்க்க வேண்­டும்.

வீட்­டி­லி­ருந்து வேலை பார்க்க முடி­யா­த­வர்­க­ளைப் பொறுத்­த­வரை அவர்­க­ளின் முத­லா­ளி­கள், அத்­தகைய ஊழி­யர்­க­ள் வேலைக்கு வராத நாட்களைச் சம்­ப­ளத்­து­டன் கூடிய மருத்­துவ விடுப்பாகக் கருத வேண்­டும் என்று மனி­த­வள அமைச்சு நேற்று அறி­வித்­தது.

விரை­வுப் பரி­சோ­தனை மூலம் தொற்று இருப்­ப­தாக தெரி­ய­வந்­துள்ள ஊழி­யர்­கள் வீட்­டி­லேயே 72 மணி நேரம் தனி­மை­யில் இருக்க வேண்­டும். அதற்குப் பிறகு மேலும் ஒரு பரி­சோ­த­னைக்கு அவர்­கள் உட்­பட வேண்­டும். கிரு­மித்­தொற்று இல்லை என்­பது தெரி­ய­வந்­தால் அவர்­கள் வேலைக்­குத் திரும்­ப­லாம்.

தொற்று இருப்­ப­தாக தெரிய வந்­தால் தொடர்ந்து அவர்­கள் தங்களைத் தனி­மைப்­ப­டுத்­திக் கொள்­ள­வேண்­டும்.

தொற்று இல்லை என்­று தெரிய­வரும் வரை நாள்­தோ­றும் ஒரு முறை அவர்கள் தங்­க­ளைப் பரி­சோ­தித்­துக் கொள்­ள­வேண்­டும்.

ஒரு­வ­ருக்­குத் தொற்று இருப்­பதாக தெரி­ய­வந்து, அறி­கு­றி­கள் எது­வும் இல்லை என்­றால் அவர், எளி­தில் பாதிக்­கக்­கூ­டிய அல்­லது அதிக ஆபத்­துள்ள பிரிவைச் சேர்ந்­த­வ­ராக இருந்தா­லொ­ழிய, மருந்­த­கத்­திற்­குச் சென்று பிசி­ஆர் பரி­சோ­த­னைக்கு உட்­பட வேண்­டிய அவ­சி­யம் இல்லை என்று அமைச்சு தெரி­வித்­தது.

சிலரைப் பொறுத்­த­வரை விரை­வுப் பரி­சோ­த­னை­யில் தொற்று இருப்­ப­தாக தெரி­ய­வந்து, நல்ல உடல்­ந­லத்­து­டன் இருந்­தாலும் அவர்­கள் பிசி­ஆர் பரி­சோ­த­னைக்­கும் செல்ல வேண்டி இருக்­கிறது.

சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு, முதி­யோர் பரா­ம­ரிப்பு, பாலர்­ பள்­ளி­கள், தொடக்­கப்­பள்­ளி­களில் வேலை செய்­வோர் இவர்­களில் அடங்­கு­வர்.

பாலர்­பள்ளி, தொடக்­கப்­பள்ளி சிறார்­க­ளுக்­கும் இது பொருந்­தும்.

போதிய அள­வு மருத்­துவ விடுப்பு காலத்­தைக் கொண்­டி­ராத ஊழி­யர்­க­ளின் தேவை­களை நிறை­வேற்­று­வ­தில் முத­லா­ளி­கள் கருணை­யோ­டும் நீக்­குப்­போக்­கு­ட­னும் நடந்து­கொள்ள வேண்­டும் என்று அமைச்சு தெரி­வித்­துள்­ளது.