வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவு காவல் துறையுடன் மேற்கொண்ட இருவார நடவடிக்கையில் பல மோசடிகளில் தொடர்புடைய 236 ஆண்களும் 100 பெண்களும் பிடிபட்டுள்ளனர். இந்நடவடிக்கைகள் செப்டம் பர் 10லிருந்து 24 வரை மேற்கொள்ளப்பட்டதாக காவல் துறை தெரிவித்தது. இந்த சந்தேக நபர்கள் இணையக் காதல் மோசடி, மின் வர்த்தக மோசடி, அரசு அதிகாரி ஆள்மாறாட்ட மோசடி, வேலை வாய்ப்பு மோசடி போன்ற 1,439க்கும் மேற்பட்ட மோசடிகளுடன் தொடர்புடையவர்கள். மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் $13 மில்லியனை இழந்துள்ளனர். சிக்கிய சந்தேக நபர் கள் 12 வயதுக்கும் 74 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். கள்ளப்பணத்தை நல்ல பணமாக்குதல் குறித்தும் இவர்கள் விசாரிக்கப்படுவதாகக் காவல் துறை தெரிவித்துள்ளது.
மோசடிகள் தொடர்பில் சிக்கிய 336 பேர்
1 mins read
-

