தவிர்க்கக்கூடிய மரணங்களை புதிய கட்டுப்பாடுகள் தடுக்கும்

தவிர்க்கக்கூடிய மரணங்களை புதிய கட்டுப்பாடுகள் தடுக்கும்

2 mins read
3849b4b9-d5b8-4817-a2b8-270176c008dd
-

லாரன்ஸ் வோங்: சுகாதாரப் பராமரிப்புத் துறை செயலாற்றல் பெருக கால அவகாசம் இருக்கும்

சிங்­கப்­பூ­ரின் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு வளங்­க­ளுக்கு இப்­போது கடு­மை­யான நெருக்­கு­தல் ஏற்­பட்டு இருக்­கிறது.

சூழ்­நி­லையை நிலைப்­ப­டுத்­த­வும் தவிர்த்­துக் கொள்­ளக்­கூ­டிய மர­ணங்­க­ளைத் தடுக்­க­வும் புதிய கடுமை­யான கட்­டுப்­பா­டு­கள் தேவைப்­ப­டு­கின்­றன என்று நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் தெரி­வித்து இருக்­கி­றார்.

கொவிட்-19 தொற்று பர­வும் வேகத்தைக் குறைக்க வேண்­டும் என்ற நோக்­கத்­து­டன் புதிய கட்­டுப்­பா­டு­கள் நடப்­புக்கு வந்­துள்­ளன.

இதன் கார­ண­மாக சிங்­கப்­பூர் தன்­னு­டைய சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை­யின் செய­லாற்­றலை மேலும் பலப்­ப­டுத்த போதிய கால­ அ­வ­காசம் கிடைக்­கும் என்­றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாள் ஒன்­றுக்கு 5,000 அல்­லது அதற்­கும் அதி­கம் பேருக்குத் தொற்று ஏற்­பட்­டா­லும் அதைச் சமாளிக்க போதிய அள­விற்கு ஆற்­ற­லைப் பெற்­றி­ருக்­கும் வகை­யில் வளங்­க­ளைப் பெருக்­கிக் கொள்ள சிங்­கப்­பூ­ருக்கு கால­அ­வ­கா­சத்தை இந்­தக் கட்­டுப்­பா­டு­கள் ஏற்­ப­டுத்­தித் தரும் என்றார் அவர்.

"நம்­மு­டைய சுகா­தா­ரப் பரா­மரிப்பு முறை பாதிப்­புக்கு உள்­ளா­கா­மல் கட்­டுப்­பாட்­டின் கீழ் இருந்து வர­வேண்­டும். முழு சுகா­தா­ரப் பரா­மரிப்பு முறைக்­கும் அள­வுக்கு அதிக சுமை ஏற்­பட்டு, அத­னால் ஏற்­ப­டக்­கூ­டிய தேவை­யற்ற மர­ணங்­க­ளைத் தவிர்த்­துக்­கொள்ள நாம் விரும்­பு­கி­றோம்," என்று புளூம்­பர்க் தொலைக்­காட்­சிக்கு அளித்த பேட்டி­யில் திரு­ வோங் தெரி­வித்­தார்.

"ஆகப் புதிய அலை தலை­காட்டி இருக்­கும் கால­கட்­டத்­தில், சிங்­கப்­பூ­ரின் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு முறை­யும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை ஊழி­யர்­களும் உண்­மை­யி­லேயே ஏராளமான நெருக்­க­டி­க­ளை­யும் மன உளைச்­ச­லை­யும் எதிர்­நோக்கி வரு­கி­றார்­கள். இதன் கார­ண­மாக கடு­மை­யான கட்­டுப்­பா­டு­களை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டி இருப்­ப­தாக நாம் கரு­து­கி­றோம்," என்று திரு வோங் கூறி­னார்.

கொவிட்-19 தொற்­றைத் தவிர்த்துக்கொள்ள ஒரு மாத கால புதிய கட்­டுப்­பா­டு­கள் நடப்­புக்கு வந்­துள்­ளன.

அன்றாட தொற்று 2,000 ஆகக் கூடி­ உள்ளது. கொவிட்-19 நோயாளி­களில் 0.2 விழுக்­காட்­டி­ன­ருக்கு மட்­டும் தீவிர சிகிச்சை தேவைப்­படும்நிலை ஏற்­பட்­டா­லும்­கூட அத­னால் சிங்­கப்­பூ­ரின் மருத்­து­வ­மனை வளத்­திற்கு நெருக்­கடி ஏற்­பட்­டு­விடும் என்று பேட்­டி­யில் திரு வோங் குறிப்­பிட்­டார்.

"அந்தச் சிறிய எண்­ணிக்­கை­யிலான நோயா­ளி­க­ளுக்குச் சரி­யான நேரத்­தில் சிகிச்சை கிடைப்­பதை உறு­திப்­ப­டுத்த வேண்­டு­மா­னால் மருத்­து­வ­ம­னை­கள் கொவிட்-19 நோயா­ளி­களில் ஏறத்­தாழ 10 விழுக்­காட்­டி­னரை வார்­டில் சேர்த்­துக்­கொண்டு அணுக்­க­மா­கக் கண்­கா­ணிக்க வேண்­டிய தேவை ஏற்­படும்.

"நாள் ஒன்­றுக்கு 5,000 பேர் பாதிக்­கப்­பட்­டால் அவர்­களில் 10 விழுக்­காட்­டி­னர் அதா­வது 500 பேர் மருத்­து­வ­ம­னை­யில் ஒரு வார காலம் தங்­கி­னால் ஏரா­ள­மான மருத்­து­வ­மனைப் படுக்­கை­கள் தேவைப்­படும்," என்று அமைச்­சர் விளக்­கி­னார்.

சிங்­கப்­பூர் மருத்­துவ வச­தி­களை அதி­க­ரிக்கப் பாடுபட்டு வரு­வ­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

கட்­டுப்­பா­டு­க­ளைக் கடு­மை­யாக்கு­வது என்ற இப்போதைய ஆகப் புதிய முடிவு, ஒட்­டு­மொத்­த­மாக சேர்ந்து எடுக்­கப்­பட்ட முடிவு என்று, பல அமைச்­சு­களை உள்­ள­டக்­கிய கொவிட்-19 சிறப்­புப் பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வர்­களில் ஒரு­வ­ரான திரு வோங் தெரி­வித்­தார்.