சிங்கப்பூரில் அதிகரித்து வரும் கொவிட்-19 கிருமித்தொற்றை ஒடுக்கும் வகையில் அக்டோபர் 24 வரை கடுமையான கட்டுப்பாடுகள் நடப்புக்கு வந்துள்ளன.கடைகளும் நிறுவனங்களும் சிரமமான காலத்தைச் சமாளிக்க தயாராகின்றன.
வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் நடைமுறை இயல்பானதாக ஆக்கப்பட்டு உள்ளது. தொடக்கப்பள்ளி, சிறப்புக் கல்வி பள்ளிக்கூட மாணவர்கள் வீட்டிலிருந்தே படிக்கிறார்கள். சமூக ஒன்றுகூடல்களில் இருவர் மட்டுமே கலந்துகொள்ளலாம்.
உணவகங்களில் தடுப்பூசி போட்டுக் கொண்ட இருவர்தான் சேர்ந்து சாப்பிட முடியும். முதல் நாளான நேற்று அலுவலகங்களில் கூட்டம் குறைந்து காணப்பட்டது. மத்திய வணிக வட்டாரத்தில் ரயில்களிலும் அலுவலகக் கட்டடங்களிலும் கூட்டம் குறைந்திருந்தது.
பூங்காக்கள் காலியாக இருந்தன. சாலைகளில் போக்குவரத்தும் சரளமாக இருந்தது. சாப்பாட்டுக் கடைகள், கடைத் தொகுதிகளில் கூட்டம் குறைந்திருந்தது.