2022 மார்ச் வரை விமானப் போக்குவரத்துத் துறைக்குச் சம்பள ஆதரவு நீட்டிக்கப்படும்

2022 மார்ச் வரை விமானப் போக்குவரத்துத் துறைக்குச் சம்பள ஆதரவு நீட்டிக்கப்படும்

1 mins read
91e4fe81-8831-47e2-8b10-4680be3227dc
-

விமானப் போக்­கு­வ­ரத்துத் துறை யைச் சேர்ந்த முத­லா­ளி­கள், தங்களுடைய ஊழி­யர்­க­ளுக்­காக மேலும் ஆறு மாத கால சம்­பள ஆத­ர­வைப் பெறு­வார்­கள்.

கொவிட்-19 கார­ண­மாக ஏற்பட்டு உள்ள பாதிப்­பில் இருந்து மீண்டுவர ஏது­வாக அவர்­க­ளுக்­கான இந்த ஆத­ரவு 2022 மார்ச் வரை நீட்­டிக்­கப்­ப­டு­கிறது.

'விமானப் போக்­கு­வ­ரத்துத் துறை ஊழி­யர்­களைத் தொடர்ந்து வேலை­யில் வைத்­தி­ருப்­ப­தற்­கான மானியம்' என்று குறிப்­பி­டப்­படும் அந்­தத் திட்­டம், $130 மில்­லி­யன் அள­வுக்கு உதவி வழங்­கு­கிறது.

அத­னால் 100க்கும் மேற்­பட்ட நிறு­வ­னங்­கள் நன்­மை­ய­டை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூர் சிவில் விமானப் போக்கு­வ­ரத்து ஆணை­யம் நேற்று இந்த விவ­ரங்­க­ளைத் தெரி­வித்­தது.

தகு­தி­பெ­றும் நிறு­வ­னங்­கள், தங்­க­ளி­டம் வேலை பார்க்­கும் ஒவ்­வொரு சிங்­கப்­பூ­ர­ருக்­கும் அல்­லது நிரந்­த­ர­வா­சிக்­கும் உரிய மாத மொத்தச் சம்­ப­ளத்­தில் முதல் $4,600 தொகைக்கு 30 விழுக்­காட்டு மானிய ஆத­ர­வைப் பெறும். இந்த ஆத­ரவு இந்த ஆண்டு அக்­டோ­பர் முதல் டிசம்­பர்வரை கிடைக்­கும்.

அடுத்த ஆண்டு ஜன­வரி முதல் மார்ச் வரை அதே தொகைக்­கான ஆத­ரவு 10% ஆக இருக்­கும்.

சாங்கி விமா­ன ­நி­லை­யத்­தில் 2021 செப்­டம்­பர் நில­வ­ரப்­படி மொத்தப் பய­ணி­கள் போக்­கு­வரத்து, கொவிட்-19க்கு முன்பு இருந்த நிலை­யில் 3.6 விழுக்­காடு அளவுக்­குத்­தான் இருந்­தது.

விமான நிறுவனங்­கள் மனி­த­வளத்­தைக் குறைத்துவிட்டன. கொவிட்-19 தலை­காட்டி 20 மாதங்கள் ஓடி­விட்ட நிலை­யில், படு­மோ­ச­மா­கப் பாதிக்­கப்­பட்ட ஒரு துறை­யாக இன்­ன­மும் இந்தத் தொழில்­துறை இருந்து வரு­கிறது என்று ஆணையம் கூறியது.