கூட்டு மோசடிக்கு உதவிய இளையருக்கு நன்னடத்தை உத்தரவு

கூட்டு மோசடிக்கு உதவிய இளையருக்கு நன்னடத்தை உத்தரவு

2 mins read
12e23f9c-214b-44a8-a94d-2e336eed3538
கிஷன் பிள்ளை கணேசன் பிள்ளை படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கூட்டு மோச­டி­யில் கிடைத்த பணத்­தில் $10,000 தொகையைப் பதுக்கி வைப்­ப­தற்­காக வங்­கிக் கணக்­கைத் திறக்­கும்­படி நண்­ப­ரி­டம் கேட்­டுக்­கொண்­டார் ஒரு­வர். கணக்­கைத் திறந்து அதில் பணம் நிரப்பிய நண்­பர் அதைத் தாமே வைத்­துக் கொள்ள முடிவு செய்­தார்.

கூட்டு மோச­டிக்கு உதவ, வங்­கிக் கணக்­கைத் திறக்க நண்­ப­ரி­டம் சொன்ன கிஷன் பிள்ளை கணே­சன் பிள்­ளைக்கு நேற்று 21 மாதம் நன்­ன­டத்தை உத்­த­ரவு விதிக்­கப்­பட்­டது.

நன்­ன­டத்தை உத்­த­ர­வின் ஒரு பகுதி ­யாக, முழு­நேர தேசிய சேவை­யா­ள­ரான கிஷன், 22, பகலில் வெளி­யில் செல்­லக்­கூ­டாது. அவர் 60 மணி நேரம் சமூ­க­சே­வை­யும் செய்ய வேண்­டும். அவர் நன்­ன­டத்­தையை உறு­தி­செய்ய $5,000 பிணை செலுத்­தும்­படி அவ­ரது பெற்­றோ­ருக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டது.

அடை­யா­ளம் குறிப்­பி­டப்படாத 77 வயது நப­ருக்கு, முன்­ன­தாக மோசடிக்காரர் ஒரு­வ­ரி­ட­மி­ருந்து அழைப்பு வந்­த­தா­க­வும் முதி­ய­வர் தமது வங்­கிக் கணக்கு விவ­ரம், ரகசிய மறை எண்­கள் ஆகி­ய­வற்றை அவ­ரி­டம் தந்­த­தா­க­வும் நீதி­மன்­றத்­தில் கூறப்­பட்­டது. பின்னர், தமது வங்கி அட்­டை­யில் 15 திருட்­டுப் பரி­வர்த்­த­னை­கள் செய்­யப்­பட்­டதை முதி­ய­வர் கண்­ட­றிந்­தார். மொத்­தம் $35,350 பணம் பறி­போ­னது.

கிஷன், ரூபஸ் ராக்­கேஷ், இமா­னு­வேல் ஆகி­யோ­ரு­டன் ரவி­வர­தன், 20, மகேந்­திர சக்­ர­வர்த்தி சாம்­ராஜ் அசோகன், 34 ஆகி­யோர் அந்­தப் பரி­வர்த்­த­னை­க­ளைச் செய்­த­தாக விசா­ர­ணை­யில் தெரியவந்­தது.

வங்­கிக் கணக்­குத் திறந்து, பின்­னர் பணத்­தைத் தாமே வைத்­துக் கொள்ள முயன்ற ரூஃபஸ் ராக்­கேஷ் குமார் கலைச்­செல்­வம், 19, மீது கடந்த வாரம் நம்­பிக்கை மோசடி குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டது. அக்­டோ­பர் 25 தேதி அவ­ருக்கு தண்­டனை விதிக்­கப்­படும்.

அர­சாங்க அதி­கா­ரி­யி­டம் பொய்­கூ­றிய இமா­னு­வே­லுக்கு ஒன்­பது மாதம் நன்­ன­டத்தை உத்­த­ரவு விதிக்­கப்­பட்­டது.

ரவி­வ­ர­தன், மகேந்­திர சக்­ர­வர்த்தி இரு­வர் மீதான வழக்­கு­கள் பின்­னொரு தேதி­யில் விசா­ரிக்­கப்­படும்.