வெளிநாட்டுத் தலையீட்டை எதிர்கொள்ள சிங்கப்பூரின் நகல் சட்டம் பொதுப்படையாக வரையப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. மற்ற பதிவுகளிலிருந்து எவ்வாறு எதிர்ப்பு உணர்வைத் தூண்டும் பிரசாரங்களை சிங்கப்பூர் அரசாங்கம் அடையாளம் காணும் என்பதைக் கவனிக்கப்போவதாக ஃபேஸ்புக் சொன்னது.
எனினும், இதன் தொடர்பில் தனது நிறுவனமும் சிங்கப்பூர் அரசாங்கமும் ஒரே இலக்கை நோக்கித்தான் சென்றுகொண்டிருப்பதாக ஃபேஸ்புக்கின் இணையப் பாதுகாப்புக் கொள்கைப் பிரிவின் தலைவர் திரு நேத்தனியல் கிளைக்கர் வலியுறுத்தினார். வெளிநாட்டுத் தலையீடு, அதிலும் குறிப்பாக மறைமுகமாக மக்களை மனம் மாறவைக்கும் நடவடிக்கைகள் தனது தளத்தில் இடம்பெறுவதை ஃபேஸ்புக் விரும்பவில்லை என்று அவர் கூறினார். 'ஃபிக்கா' எனப்படும் வெளிநாட்டுத் தலையீட்டுக்கு எதிரான நகல் சட்டம் இம்மாதம் 13ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.