தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

துவாஸ் வெடிப்பு: வலியில் கதறிய ஊழியர்கள்

2 mins read
5542e26f-10bf-4753-95b3-c209134e50d7
உடலின் 54 விழுக்காட்டுப் பகுதியில் தீக்காயங்கள் ஏற்பட்ட திரு ஹொசேன் ஜித்து (இடது). கோப்புப்படம்/ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கடந்த பிப்ரவரி மாதம் துவா­ஸில் உள்ள தொழில்­துறை கட்­ட­டத்­தில் தீ விபத்து நிகழ்ந்­த­போது ஆலை­யில் இருந்த எட்டு ஊழி­யர்­கள் துய­ரத்­தில் அல­றி­ய­படி அருகிலிருந்த திட­லுக்கு ஓடி­யி­ருக்­கின்­ற­னர். அரு­கில் மற்ற பிரி­வு­களில் வேலை செய்­து­கொண்­டி­ருந்த ஊழி­யர்­கள், மோச­மான தீக்­கா­யங்­க­ளால் தவித்த ஊழி­யர்­க­ளின் மேல் தண்ணீ­ரைப் பீய்ச்சி அவர்­க­ளைக் காப்­பாற்ற முயன்­ற­னர்.

கடந்த பிப்­ர­வரி மாதம் 24ஆம் தேதி­யன்று 32இ துவாஸ் அவென்யூ 11ல் நிகழ்ந்த இந்­தத் துய­ர­மான அனு­ப­வங்­களை காய­ம­டைந்த ஊழி­யர்­களில் ஒரு­வ­ரான 32 வயது திரு ஹொசேன் ஜித்து விசா­ர­ணைக் குழு­வின் முன்­னி­லை­யில் பகிர்ந்து­கொண்­டார்.

நீதி­மன்­றத்­தில் திரு ஜித்து முகக்­க­வ­சம் அணிந்­தி­ருந்­த­போ­தும் அவ­ரின் முகத்­தில் இருந்த தீக்­காயங்­க­ளின் தழும்­பு­கள் வெளியே தெரிந்­தன, அவ­ரின் உட­லில் 54 விழுக்­காட்­டுப் பகு­தி­களில் தீக்­காயங்­கள் ஏற்­பட்­டன. மூச்சு விடு­வதற்­கும் கண்­களை மூடு­வ­தற்­கும் அவர் சிர­மப்­பட்­டார்.

"எனது கண்­க­ளுக்­குக் கீழ் உள்ள தோல் பகுதி எரிந்­து­ போனது, விபத்­துக்­குப் பிறகு என்­னால் கண்­களை மூட­வும் தூங்­க­வும் முடி­ய­வில்லை," என்று அவர் சொன்­னார். சம்­ப­வத்­தில் மோச­மான தீக்­கா­யங்­க­ளுக்கு ஆளான 38 வயது திரு சுப்­பை­யன் மாரி­முத்து, 29 வயது திரு அனி­சுஸ்­ஸா­மான் முக­மது, 23 வயது திரு ஷோஹெல் முக­மது ஆகி­யோர் மாண்­ட­னர். சம்­ப­வம் நிகழ்ந்­த­போது ஆலை­யில் இல்­லாத இரு­வர் உட்­பட ஏழு பேர் காய­முற்­ற­னர்.

ஆலை­யில் இயந்­தி­ரக் கோளாற்­றால் விபத்து நேர்ந்­த­தாகக் கரு­தப்­ப­டு­கிறது என்று முன்­ன­தாக விசா­ர­ணை­யின்­போது தெரி­ய­வந்­தது.

ஆலை­யில் வேலை செய்­து­கொண்­டி­ருந்த ஊழி­யர்­கள் 'ஸ்டார்ஸ் எஞ்­சி­னி­ய­ரிங்' நிறு­வ­னத்­தைச் சேர்ந்­த­வர்­கள்.

எண்­ணெய்­யைச் சுட­வைத்­த­போது அதன் தொடர்­பில் இயந்­திரத்­தின் வெப்­ப­நிலை சரி­யா­கக் கண்­கா­ணிக்­கப்­ப­ட­வில்லை என்று நிறு­வ­னத்­தின் ஒரே இயக்­கு­ந­ரான திரு சுவா சிங் டா தெரி­வித்­தார். இயந்­தி­ரத்தை சுமார் ஒரு மணி­நே­ரத்­திற்­குப் பயன்­ப­டுத்­திய பிறகு அதி­லி­ருந்து சத்­தம் வரு­வ­தைக் கேட்­ட­தா­கத் திரு ஜித்து கூறி­னார். இயந்­தி­ரத்தை அணைத்த பிற­கும் சத்­தம் கேட்டதாக அவர் சொன்­னார்.

சம்­ப­வம் நிகழ்ந்­த­போது மயக்­க­மடைந்த திரு ஜித்து சிகிச்­சைக்­காக சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­மனைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டார்.